மேற்கு வங்க மாநிலத்தில் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுபடுத்தும் பொருட்டு, அம்மாநில அரசு மலிவு விலையில் கோழிக்கறி, மீன், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் படி கோழிக்கறி, மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்யும். இத்திட்டத்தின் படி 21 வாகனங்கள் வாங்கப்பட்டு, அவை கொல்கத்தாவில் உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றன. 8 வாகனங்கள் மூலம் மீன் விற்பனை செய்யப்படுகிறது. 6 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற வாகனங்களில் கோழிக்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை மூலம் வெளிச்சந்தையில் விலைவாசி ஓரளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|