LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

உருபு என்றால் என்ன ?

மயில்போல மங்கை - இது மயிலை மங்கைக்கு உவமையாகச் சொல்கின்ற வாக்கியம். ஒன்றை மற்றொன்றுக்கு உவமை கூறுவது அதன் நோக்கம். இங்கே மயில் என்பது உவமானம். மங்கை என்பது உவமேயம். போல என்பது உவம உருபு.

உருபு உருபு’ என்று நான் எழுதுந்தோறும் அடிக்கடி பயன்படுத்துகிறேனே, உருபு என்றால் என்ன... அது உறுப்பு என்பதைப்போலவா...? ஒன்றும் குழம்ப வேண்டா.

உருபு என்பதும் சொல் என்று கருதத்தக்க ஓர் உருப்படி. அது தனியெழுத்தாகவோ கூட்டெழுத்துகளாகவோ இருக்கும்.

சொல்லுக்குள்ளதுபோல் உருபுகளுக்கு உறுதியான திட்டமான பொருள் இல்லை. ஆனால், அவற்றுக்குச் சொல்லோடு கூடி பொருளுணர்த்தும் பொறுப்புண்டு.

இப்போது உவம உருபுக்கு வருவோம். நம்மில் பெரும்பாலோர் ‘போல’ என்ற உவம உருபைப் பயன்படுத்தி எழுதுவோம். நான் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு, நவீன எழுத்தாளர்களிடமிருந்து ‘போலிருந்தது’ என்ற சொற்றொடரைப் பறித்துக்கொண்டால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும். அத்தனை தடவை ‘போலிருந்தது’ போட்டு எழுதுவார்கள்.

என்னவோ போலிருந்தது.
பேசாமல் திரும்பிவிடலாம் போலிருந்தது.
இப்போது தேவலாம் போலிருந்தது.

இந்தப் ‘போல’ என்ற உவம உருபைப்போலவே இன்னும் பல உருபுகள் தொடுவாரின்றிக் கிடக்கின்றன. அவற்றையும் எடுத்து அங்கங்கே பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை.

போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, தகைய, பொருவ -- ஆகியனவே அவை.

உவம உருபுகளுக்குத் திட்டமான பொருளில்லை, ஒன்றை மற்றொன்றுக்கு உவமை கூறத் தோன்றுகின்றன, அவ்வளவே...! பிற உவம உருபுகளையும் பயன்படுத்தி எழுதினால் ‘போல்படும்பாடு’ குறையும்.

உவம உருபுகளைப் பயன்படுத்திச் சில வாக்கியங்களை அமைப்போம்.

1. போல - வானத்தைப்போல மனம்படைத்த மன்னவனே !

2. புரைய - குயில்புரையக் கூவியழைத்தாள் அவள் (இங்கே புரைய என்பதை ஒலிசார்ந்தவற்றுக்கு உவம உருபாக்குவது சிறப்பு)

3. ஒப்ப - மயிலொப்ப ஆடிய மாதவியாள்.

4. கடுப்ப - தீக்கடுப்பச் சொன்ன வார்த்தைகள்

பிறவற்றுக்கும் ஓய்ந்த நேரத்தில் வாக்கியங்கள் அமைத்துப் பாருங்கள் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.