இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பானது 15/02/2013 ஆம் தேதியில் 16.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், மாத இறுதியான, 28/02/2013 தேதியில் 8,800 கோடி ரூபாய் குறைந்து 16.05 லட்சம் கோடி ரூபாயாகிவிட்டது.
அதே போல இதே வாரத்தில் வெளிநாட்டுச் செலாவணிகளின் சொத்துமதிப்பு 25,822 கோடி டாலராகவும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,697 கோடி டாலராகவும் குறைந்து விட்டது. இந்த குறைவிற்குக் காரணம் அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டினால், உண்டானதாகக் கூறப்படுகிறது.
தற்போது இது சிறிய அளவிலானதாக இருப்பினும் இதே நிலை நீடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதென்பதை மறுக்கமுடியாது. அப்படி நீடித்தால், அமெரிக்க டாலருக்கு எதிரான நானயங்களின் மீது இந்தியா இன்னும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிவரும்.
ஆனால், அமெரிக்கச்சார்பில் முதலிடத்திலிருக்கும் தற்போதைய இந்திய நாட்டின் அரசியல் சூழ்நிலை அதற்கு இடங்கொடுக்காது.
தலைக்குமேல் தொங்கும் இந்தக்கத்தியிடமிருந்து இந்தியாவை யார் பாதுகாப்பது?
|