அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் நாடு திரும்பவேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வில் கணினி துறையில் பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடன். இவர் சமீபத்தில், அமெரிக்கா மற்ற நாடுகளை இணையம் வழியாக உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தி அதற்கான ஆதரங்களையும் அவர் வெளியிட்டார். இதனால், அமெரிக்க அரசின் கோபத்திற்கு ஸ்நோடென் ஆளானார். கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால், அமெரிக்காவை விட்டு வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில் 'ஸ்னோடன் நாடு திரும்பினால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்' என, அமெரிக்க அமைப்புகள் சில கருத்து தெரிவித்தன.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ஜே காமி நேற்று கூறியதாவது: ரஷ்யாவில் தற்காலிகமாக தங்கியுள்ள ஸ்னோடன், உடனடியாக நாடு திரும்ப வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்று, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சந்திக்க வேண்டும். ஸ்னோடன் விவகாரத்தில், அதிபர் ஒபாமாவின் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஸ்னோடன் பொதுமன்னிப்பு குறித்து தக்க தருணத்தில் முடிவெடுக்கப்படும் என ஜே காமி தெரிவித்துள்ளார்.
|