|
|||||
யார் இந்த கைலாஷ் சத்யார்த்தி !! |
|||||
நம்மூர்காரர்களுக்கு, மலாலாவைப் பற்றித் தெரிந்த அளவுக்குக்கூட, நம்மூர் கைலாஷ் சத்யார்த்தி குறித்து நாம் அறியவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யார் இவர் ? மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் பிறந்த சத்யார்த்தி, தில்லியில் மின்னியல் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு, 1983-இல் "பச்பன் பச்சாவ் ஆந்தோலன்' (குழந்தைகளைப் பாதுகாப்போம்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெரும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் : தற்போது 60 வயதாகும் சத்யார்த்தி, குழந்தைகளின் உரிமைகளுக்காக உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். ராபர்ட் கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் சத்யார்த்தி ஆவார். இவருக்கு முன்பாக அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோதிலும், அவர் அல்பேனியாவில் பிறந்தவர் ஆவார். நோபல் பரிசு பெறும் ஏழாவது இந்தியர் சத்யார்த்தி. இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் “பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார். உலகம் முழுவதும் 16 கோடியே 80 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 7 கோடியே 80 லட்சமாக இருந்தது. ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம் : கைலாஷ் சத்யார்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.குழந்தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நார்வேயில் உள்ள நோபல் தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக அவர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படக் கூடாது. உலகின் ஏழை நாடுகளில் தற்போதைய மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர், 25 வயதுக்கும் கீழ் உள்ளனர். அமைதியான உலக வளர்ச்சிக்கு குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, பூசல் நிறைந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான உரிமைகள் மீறப்படுவது, தலைமுறை தலைமுறையாக வன்முறை தொடர்வதற்கு வழிவகுக்கிறது. நிதி ஆதாயத்துக்காக குழந்தைகள் சுரண்டப்படுவதற்கு எதிராக, மகாத்மா காந்தியடிகளின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, கைலாஷ் சத்யார்த்தி அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். நன்றி: கார்த்திக் வழங்கும் சமூக நீதி |
|||||
by Swathi on 15 Oct 2014 0 Comments | |||||
Tags: Kailash Satyarthi Who is Kailash Satyarthi Nobel Peace Prize 2014 கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|