அனேகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் எந்த நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவார் என கோலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, அவர் அஜித் அல்லது விஜய் படத்தை இயக்கப்போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இரண்டுநாட்களுக்கு முன்பு அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின. உடனே அதை மறுத்துவிட்டார் கே.வி.ஆனந்த்.
மறுத்ததோடு இந்தச்செய்தியைப் படித்தால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல அந்த ஹீரோவும் டென்ஷனாகிவிடுவார் என்று சொல்லியிருந்தார் கே.வி.ஆனந்த். யார் அந்த ஹீரோ என அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனாலும் அவர் இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஹீரோ ஆர்யா என்றும் அந்தப்படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
|