வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.
அஜீத்துடன் சேர்ந்து இந்த படத்தில் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் என பலர் நடித்திருகின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியான இந்த படம் வசூலிலும், விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திட்டத்தில் கௌதம் மெனன் ஈடுபட்டுள்ளாராம்.
இது குறித்து கெளதம் மேனன் கூறும் போது, கதை முழுக்க முழுக்க ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கும், அவருடைய 15 முதல் 16 வயது மகளுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.
இதில் போலீஸ் அதிகாரி பாகங்கள் முற்றிலுமாக இல்லாமல் ஒரு முன்னாள் அதிகாரி அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த படமாக இருக்குமாம். இப்படம் குறித்து இறுதி முடிவு என்பது தற்போது அஜித்தின் வார்த்தையில் தான் உள்ளது என ட்விஸ்ட் வைக்கிறார் கவுதம் மேனன்.
தற்போது சிம்பு படத்தை மீண்டும் தூசு தட்டியிருக்கும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை ஐங்கரன் நிறுவனத்துக்காக இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதனை அடுத்து என்னை அறிந்தால் பாகம் 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|