LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மகாராஷ்டிராவில் பெண் கைதிகள் குடும்பம் மற்றும் உறவினர்களிடம் வீடியோ காலில் பேசலாம்!

மகாராஷ்டிராவில் பெண் கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைகளில் உள்ள கைதிகள் இனிமேல் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு  வீடியோ மூலம் பேசும் வசதிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநில சிறைத்துறை அதிகாரி கூறினார்.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் முதன் முதலாக இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி மாநிலத்தில் உள்ள மகளிர் சிறைகள் மற்றும் திறந்தவெளி சிறையில் உள்ள கைதிகளுக்காக ஸ்மார்ட் வீடியோ காலிங் வசதியை மாநில சிறைத்துறை தொடங்கி இருக்கிறது.

கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் அல்லது உறவினருடன் 5 நிமிட நேரம் பேசலாம். இதற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும். புனே, எரவாடா சிறையில் இந்த வசதி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு இருந்தது. தற்போது மகளிர் சிறைகள் மற்றும் திறந்தவெளி சிறைகளில் இந்த வசதி தொடங்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கைதிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் உறவினர்களுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சிறைத் துறையில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள மொபைல் நம்பரில் பேச முடியும். 

வீடியோ கால் செய்ய ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறைக் கைதிகளுக்கான நல நிதியில் இருந்து இந்த போன்கள் வாங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

கைதிகள் வீடியோ காலில் பேசும்போது அவர்கள் குடும்ப விஷயங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்களா என்பதை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்காணிப்பார்.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.