வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி ஆராய்ச்சியில் மைல் இது கருதப்பட்டது. தற்போது முழு அளவில் க்யூரியாசிட்டி தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2016-ல் செவ்வாய் கிரகத்திற்கு மேலும் ஒரு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது நாசா விண்வெளிமையம். இந்த விண்கலத்திற்கு இன்சைட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம், தற்போது அனுப்பியுள்ள க்யூரியாசிட்டி விண்கலத்தை விட பன்மடங்கு தொழில்நுட்பம் கொண்டாக உருவாக்கப்பட உள்ளது. பூமிக்கும், செவ்வாய்க்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, மனிதன் வாழ ஏற்ற சூழல் அங்கு உள்ளதா, இல்லையா போன்ற பலவிஷயங்களை இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.
|