வாஷிங்டன், ஈரானில் நடக்கவிருக்கும் அணி சேரா நாடுகளுக்கான மாநாட்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறை கூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையும் விதித்துள்ளன மற்றும் ஈரானிலிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரான் தலைநகர் டெக்ரானில், வரும், 30 மற்றும் 31ம் தேதிகளில், அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
|