LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கால்வாய்க்குள் பஸ் விழுந்து 27 பேர் சாவு, 25 பேர் காயம்

 

டேராடூன், ஆக. 1: உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கால்வாய்க்குள் விழுந்ததில் 27 பேர் இறந்தனர்; 25 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹனூலில் இருந்து விகாஸ்நகருக்கு 52 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புதன்கிழமை புறப்பட்டது. இதில் இருந்தவர்கள் 
பெரும்பாலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.சக்ரதா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரம் 
இருந்த 200 மீட்டர் ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் பற்றி போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் 
தெரிவித்தனர். மேலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.இதில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். 
படுகாயமடைந்த 25 பேர் சக்ரதா ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் 
வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மீட்புப் பணியின்போது, கடுமையாக மழை பெய்ததால், படுகாயமடைந்தவர்களை உடனடியாக 
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிலர் இறக்க நேரிட்டது. பஸ் வேகமாக வந்ததும், சாலை பழுதடைந்திருந்ததும் விபத்துக்கு 
முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் அறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில முதல்வர் விஜய் பகுகுணா, இறந்தவர்களின் 
குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநில கவர்னர் ஆசிஷ் குரேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 
இரங்கல் தெரிவித்துள்ளார்.

டேராடூன், ஆக. 1:

 

     உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கால்வாய்க்குள் விழுந்ததில் 27 பேர் இறந்தனர், 25 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம் ஹனூலில் இருந்து விகாஸ்நகருக்கு 52 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புதன்கிழமை புறப்பட்டது. இதில் இருந்தவர்கள் பெரும்பாலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.சக்ரதா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரம் இருந்த 200 மீட்டர் ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் பற்றி போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.இதில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். படுகாயமடைந்த 25 பேர் சக்ரதா ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மீட்புப் பணியின்போது, கடுமையாக மழை பெய்ததால், படுகாயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிலர் இறக்க நேரிட்டது. பஸ் வேகமாக வந்ததும், சாலை பழுதடைந்திருந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் அறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில முதல்வர் விஜய் பகுகுணா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநில கவர்னர் ஆசிஷ் குரேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.