|
|||||
கால்வாய்க்குள் பஸ் விழுந்து 27 பேர் சாவு, 25 பேர் காயம் |
|||||
டேராடூன், ஆக. 1: உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கால்வாய்க்குள் விழுந்ததில் 27 பேர் இறந்தனர்; 25 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹனூலில் இருந்து விகாஸ்நகருக்கு 52 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புதன்கிழமை புறப்பட்டது. இதில் இருந்தவர்கள்
பெரும்பாலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.சக்ரதா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரம்
இருந்த 200 மீட்டர் ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் பற்றி போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல்
தெரிவித்தனர். மேலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.இதில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.
படுகாயமடைந்த 25 பேர் சக்ரதா ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள்
வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மீட்புப் பணியின்போது, கடுமையாக மழை பெய்ததால், படுகாயமடைந்தவர்களை உடனடியாக
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிலர் இறக்க நேரிட்டது. பஸ் வேகமாக வந்ததும், சாலை பழுதடைந்திருந்ததும் விபத்துக்கு
முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் அறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில முதல்வர் விஜய் பகுகுணா, இறந்தவர்களின்
குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநில கவர்னர் ஆசிஷ் குரேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
இரங்கல் தெரிவித்துள்ளார்.
டேராடூன், ஆக. 1:
உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கால்வாய்க்குள் விழுந்ததில் 27 பேர் இறந்தனர், 25 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம் ஹனூலில் இருந்து விகாஸ்நகருக்கு 52 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புதன்கிழமை புறப்பட்டது. இதில் இருந்தவர்கள் பெரும்பாலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.சக்ரதா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரம் இருந்த 200 மீட்டர் ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் பற்றி போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.இதில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். படுகாயமடைந்த 25 பேர் சக்ரதா ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மீட்புப் பணியின்போது, கடுமையாக மழை பெய்ததால், படுகாயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிலர் இறக்க நேரிட்டது. பஸ் வேகமாக வந்ததும், சாலை பழுதடைந்திருந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் அறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில முதல்வர் விஜய் பகுகுணா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநில கவர்னர் ஆசிஷ் குரேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|