பெய்ஜிங், கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் நவீன ஏவுகணையை விரைவில் ஏவும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. டோங்பெங்-41 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை நியூக்ளியர் குண்டுகளை சுமந்து 14000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்ற மாதத்தில் இதற்கான சோதனையை சீனா நடத்தியுள்ளது என்று அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை 10 நியூக்ளியர் குண்டுகளை தாங்கி செல்லக்கூடியது ஆகும். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது டோங்பெங்-41.
|