கொழும்பு - இந்திய அணியுடன் விளையாடிய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கம்பீர், இர்பான் பதான் களமிறங்கினர். கம்பீர் 17 ரன்னிலும் கோஹ்லி 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வாட்சன், வார்னர் ஆகியோர் அபாரமாக விளையாடி 133 ரன் சேர்த்த நிலையில் 72 ரன்னுடன் வாட்சன் அவுட்டானார். அதை தொடர்ந்து வார்னருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து 14.5 ஓவரிலேயே 141 ரன் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். வார்னர் 63 ரன்னும், மேக்ஸ்வெல் 4 ரன்னும் எடுத்தனர்.
|