அடிஸ் அபாபா : எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் மெலிஸ் செனாவி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். எத்தியோப்பிய கிளர்ச்சியாளராக இருந்து கடந்த 1991ம் ஆண்டு, அதிபரானவர் மெலிஸ் செனாவி, 57 வயதான இவர். கடந்த 95 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார். இரண்டு மாதங்களாக அவர் உடல் நலக்குறைவின் காரணமாக வெளியே வரவில்லை. அடிஸ் அபாபா நகரில், சமீபத்தில் நடந்த ஆப்ரிக்க தலைவர்கள் மாநாட்டில் கூட அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த மெலிஸ், மரணமடைந்து விட்டதாக, எத்தியோப்பிய அரசு "டிவி' அறிவித்துள்ளது. அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார், என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மெலிஸ் மறைவையடுத்து துணை பிரதமர் ஹெய்லிமரியம் டிசாலின், பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார். உள்நாட்டு கலவரத்தை சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தார் மெலிஸ் செனாவி. தற்போது, இவரது மறைவால் மீண்டும் எத்தியோப்பியாவில் உள்நாட்டு கலவரம் தலைகாட்டும் அபாயம் உள்ளது என்பது அரசியல் வல்லுனர்களின் கருத்து.
அடிஸ் அபாபா : எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் மெலிஸ் செனாவி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். எத்தியோப்பிய கிளர்ச்சியாளராக இருந்து கடந்த 1991ம் ஆண்டு, அதிபரானவர் மெலிஸ் செனாவி, 57 வயதான இவர். கடந்த 95 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார். இரண்டு மாதங்களாக அவர் உடல் நலக்குறைவின் காரணமாக வெளியே வரவில்லை. அடிஸ் அபாபா நகரில், சமீபத்தில் நடந்த ஆப்ரிக்க தலைவர்கள் மாநாட்டில் கூட அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த மெலிஸ், மரணமடைந்து விட்டதாக, எத்தியோப்பிய அரசு "டிவி' அறிவித்துள்ளது. அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார், என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மெலிஸ் மறைவையடுத்து துணை பிரதமர் ஹெய்லிமரியம் டிசாலின், பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார். உள்நாட்டு கலவரத்தை சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தார் மெலிஸ் செனாவி. தற்போது, இவரது மறைவால் மீண்டும் எத்தியோப்பியாவில் உள்நாட்டு கலவரம் தலைகாட்டும் அபாயம் உள்ளது என்பது அரசியல் வல்லுனர்களின் கருத்து.
|