பெய்ஜிங், சீனா ஜூலை 31, சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 80 பேர் உயிரிழந்தனர். சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன.வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சீனாவின் பல பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
|