|
|||||
சி-17 ரக விமானம் அடுத்த ஆண்டில் டெலிவரி |
|||||
லாங் பீச் (கலிபோர்னியா), ஆக. 1: இந்திய ராணுவத்துக்காக போயிங் நிறுவனம் தயாரித்து வரும் சி-17 ரக விமானம் முழு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டில் முதல் விமானம் டெலிவரி செய்யப்பட உள்ளது.இந்திய அரசு, ராணுவ போக்குவரத்துக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 கனரக (சி-17
ரக) விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இவ்விழாவில் கலந்துகொண்ட இந்திய தூதரக அதிகாரி பார்த்தசாரதி கூறியதாவது: இந்தியாவுக்கான சி-17 ரக விமான இணைப்பு விழா, இந்திய-அமெரிக்க
உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியாவின் மனிதவளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ராணுவ
தளவாடங்களை தயாரிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு
அதிகரித்து வருகிறது என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க விமானப்படைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய வாடிக்கையாளராகி உள்ளது இந்தியா.
இந்த சி-17 ரக விமானம் வெள்ளம் மற்றும் இதர இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இதுபோன்ற விமானம் ஏற்கெனவே 18 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை 245 விமானங்களை
விற்றுள்ளது. இதில் 217ஐ அமெரிக்கா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாங் பீச் (கலிபோர்னியா), ஆக. 1:
இந்திய ராணுவத்துக்காக போயிங் நிறுவனம் தயாரித்து வரும் சி-17 ரக விமானம் முழு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.அடுத்த ஆண்டில் முதல் விமானம் டெலிவரி செய்யப்பட உள்ளது.இந்திய அரசு, ராணுவ போக்குவரத்துக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 கனரக விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட இந்திய தூதரக அதிகாரி பார்த்தசாரதி கூறியதாவது, இந்தியாவுக்கான சி-17 ரக விமான இணைப்பு விழா, இந்திய அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியாவின் மனிதவளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ராணுவ தளவாடங்களை தயாரிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க விமானப்படைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய வாடிக்கையாளராகி உள்ளது இந்தியா. இந்த சி-17 ரக விமானம் வெள்ளம் மற்றும் இதர இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இதுபோன்ற விமானம் ஏற்கெனவே 18 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை 245 விமானங்களை விற்றுள்ளது. இதில் 217ஐ அமெரிக்கா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|