சென்னை : நாட்டின் 66-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். சென்னை கோட்டையில் ஜெயலலிதா தேசியக் கொடியை பன்னிரெண்டாவது முறையாகும். இந்நிகழ்ச்சியில், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
|