ஹூஸ்டன், ஆக. 6:
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் செலுத்திய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பிவைக்கப்பட்டது. ரூ.13,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம், மணிக்கு 20 ஆயிரம் கி.மீ. வேகத்தில், சுமார் 570 மில்லியன் கிலோ மீட்டர் விண்ணில் பயணித்து திங்கள்கிழமை செவ்வாய்க்கிரகத்தை நெருங்கியது. விண்கலம் தரையிறங்குவதற்கு வசதியாக அதன் வேகத்தை மணிக்கு 2 கிலோ மீட்டராக நாசா விஞ்ஞானிகள் குறைத்தனர். கியூரியாசிட்டியைக் கண்காணிப்பதற்காக மார்ஸ் ஒடிசி என்ற விண்கலமும் ஏற்கெனவே அனுப்பப்பட்டிருந்தது. மனித உயிரினம் வாழ்வதற்கு வசதி உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
|