துபாய், ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான உலக லெவன் அணியின் கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்திய வீரர்களாகிய விராத் கோஹ்லி, காம்பிரும் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களைக் கொண்டு 12 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான அணியை தேர்வு செய்ய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அணியில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் மூன்று பேர் இடம் பிடித்தனர். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து சார்பில் தலா இரண்டு வீரர்களும், தென் ஆப்ரிக்கா சார்பில் ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.
|