டெஹ்ரான், அணுசக்தி திட்டங்களை கைவிட முடியாது என, ஈரான் தலைவர் அயதுல்லா காமினி தெரிவித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அணி சேரா நாடுகளின் மாநாடு நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், உட்பட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஈரான் நாட்டில் அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா காமினி, மாநாட்டில் பேசியது, அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டப் பணிகளை, ஒரு போதும் கைவிட முடியாது. அணு ஆயுதங்களை பெற்றிருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகள், உண்மையில் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க மனமில்லாமல். எங்கள் நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளை திணித்து வருகின்றன.
|