இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் வரும் வியாழக்கிழமை நடைபெறும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்கள். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டின் போது, இருவரும் தனியாக சந்தித்து பல முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக இருநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது வரும் நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள சவால்கள் மற்றும் இரு தரப்பில் நடைபெறும் பனிப் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார்கள் ௭ன்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
|