|
|||||
பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது பாகிஸ்தான் |
|||||
வாஷிங்டன், ஆக. 1: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கான இடமாக இருப்பதாக, அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டேனியல்
பெஞ்சமின் தெரிவித்தார்.புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: லஷ்கர்-இ-தொய்பாவின் பலம் குறைந்துவிட்டதாகக் கருதவில்லை. அது
நமக்குப் பிரதானப் பிரச்னையாகவே இருந்து வருகிறது. தெற்காசியப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கு லஷ்கர்-இ-தொய்பா மிரட்டலாக இருந்து வருவதை
ஏற்கெனவே பலமுறை தெரிவித்துள்ளேன்.லஷ்கர்-இ-தொய்பாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை அமெரிக்கா
வற்புறுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் கூடுதல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கான
புகலிடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து, ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் முயற்சிகளும்,
அவ்வப்போது நிகழும் வன்முறைகளும் இந்திய அரசுக்குக் கவலை அளிக்கும் விஷயங்களாகத் தொடர்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே
நடக்கும் வர்த்தகப் பேச்சுகள், இருதரப்பு பதற்றத்தைத் தணிக்கும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால், பயங்கரவாதிகளின் புதிய தாக்குதல் முனைப்புகள்
இதற்கு எதிராக இருக்கின்றன. ஒசாமா பின்லேடன் உள்பட அல்காய்தாவின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட பின், மத்தியக்கிழக்கு நாடுகளைச் சேர்ந்த
மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்றார் டேனியல் பெஞ்சமின்
வாஷிங்டன், ஆக. 1:
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கான இடமாக இருப்பதாக, அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டேனியல் பெஞ்சமின் தெரிவித்தார்.புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது, லஷ்கர் இ தொய்பாவின் பலம் குறைந்துவிட்டதாகக் கருதவில்லை. அது நமக்குப் பிரதானப் பிரச்னையாகவே இருந்து வருகிறது. தெற்காசியப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கு லஷ்கர் இ தொய்பா மிரட்டலாக இருந்து வருவதை ஏற்கெனவே பலமுறை தெரிவித்துள்ளேன்.லஷ்கர் இ தொய்பாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் கூடுதல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கான புகலிடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து, ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் முயற்சிகளும், அவ்வப்போது நிகழும் வன்முறைகளும் இந்திய அரசுக்குக் கவலை அளிக்கும் விஷயங்களாகத் தொடர்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் வர்த்தகப் பேச்சுகள், இருதரப்பு பதற்றத்தைத் தணிக்கும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால், பயங்கரவாதிகளின் புதிய தாக்குதல் முனைப்புகள் இதற்கு எதிராக இருக்கின்றன. ஒசாமா பின்லேடன் உள்பட அல்காய்தாவின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட பின், மத்தியக்கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்றார் டேனியல் பெஞ்சமின். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|