இஸ்லாமாபாத், ஆக. 8: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான சையத் தலீப் ஹுசைன் ஷா (70)தனது நண்பரின் செங்கல் சூளைக்கு அருகே இருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்துவிட்டனர். இதனை பாகிஸ்தான் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த கொலை சம்பவத்திற்கு அரசியல்ரீதியான முன்பகையே காரணம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜர்தாரியும், பிரதமர் அஷ்ரஃபும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் குஜராத் மாவட்டத்தின் மக்கள் கட்சித் தலைவராக சையத் இருந்துவந்தார்.குஜராத் மாவட்ட கவுன்சிலில் தொடர்ந்து 4 முறை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இஸ்லாமாபாத், ஆக. 8:
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான சையத் தலீப் ஹுசைன் ஷா (70)தனது நண்பரின் செங்கல் சூளைக்கு அருகே இருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்துவிட்டனர். இதனை பாகிஸ்தான் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த கொலை சம்பவத்திற்கு அரசியல்ரீதியான முன்பகையே காரணம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜர்தாரியும், பிரதமர் அஷ்ரஃபும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் குஜராத் மாவட்டத்தின் மக்கள் கட்சித் தலைவராக சையத் இருந்துவந்தார்.குஜராத் மாவட்ட கவுன்சிலில் தொடர்ந்து 4 முறை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
|