ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிளாட்டினம் சுரங்கத்தில், தொழிலாளர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதர்க்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 34 பேர் பலியாயினர். தங்கத்தை காட்டிலும் விலை உயர்ந்த உலோகமான பிளாட்டினம் தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தில், மரிக்கானா பகுதியில் உள்ள சுரங்கத்தில் தான் உலகிலேயே அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு கோரி, கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரண்டு தொழிலாளர் சங்கத்தினருக்கிடையே மோதல் வெடித்தது. போலீசார் மீதும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த மோதலைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர். 78 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
|