சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து உள்ளதாகவும் அது குறித்து பேசுவதற்காக ராஜபக்சே இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரப்பூர்வ பயணத்தை வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி மேற்கொள்ள இருப்பதாகவும் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி வரும் ராஜபக்சே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருகிறது என இந்தியா அதிருப்தியடைந்துள்ள நிலையில், ராஜபக்சே இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
|