|
|||||
உலக தண்டுவட பாதிப்பு தினம் - சிறப்பு சாலை விதிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் |
|||||
உலக தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு தோழன் அமைப்பும் ,SIPA -தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து சிறப்பு சாலை விதிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் மேற்கொண்டனர் ஒரு சில வினாடிகளில் நிகழும் விபத்து ஒருவரை வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் என்பதை எடுத்துரைக்க விபத்துகளில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சக்கர நாற்காலிகளில் வந்து சாலைகளில் வண்டிகளில் பயணம் செய்வோருக்கு எடுத்துரைத்தனர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய திரு. ஞான பாரதி அவர்கள் "தண்டுவட பாதிப்பு என்பது ஒருவரை வாழ்நாள் முழுவதும் முடமாக்கி அவரை இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் செய்து விடும்" என்றார். மேலும் "தண்டு வடம் பாதிக்கப்பட்டவரால் நடக்க முடியாது , கைகளை கூட இயல்பாய் பயன்படுத்த இயலாது .மேலும் இயல்பாய் சிறுநீர் , மலம் கழிக்க இயலாது . தொடுதல், வலி போன்ற உணர்வுகளை இழந்துவிடுவார்கள் என விளக்கினார் .மேலும் அடிபட்ட இடத்தை பொறுத்து பாதிப்பின் மாறுபடும் என்றும் , முக்கியமாக இன்றுவரை தண்டு வாடா பாதிப்பிற்கு முழுமையான மருத்துவம் இல்லை" எனவும் கூறினார் . இதை வருமுன் காப்பதே சிறந்தது , சாலையில் மோட்டார் வாகனத்தில் செல்வர் பாதுகாப்புடனும் .நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் . உலக முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தண்டு வாடா பாதிப்பு அடைகின்றனர் எனவும் அதில் பெரும்பாலானோர் சாலை விபத்துக்களாலேயே பாதிப்பு அடைகின்றனர் எனவும் கூறினார். தோழன் அமைப்பின் திரு . ராதாகிருஷ்ணன் நிகழ்விற்கு வந்திருந்த தண்டுவட பாதிப்படைந்த தன்னார்வலர்களின் மன உறுதியையும் , தைரியத்தையும் பாராட்டி இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மிகுந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் வந்ததற்கு நன்றி தெரிவித்தார், பிரச்சாரத்தில் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் : 1.தண்டுவடம் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது நிறைய பேருக்கு பாதிப்படைந்ததே தெரிவதில்லை. 2.CRASH சோதனை செய்யபட்டபிறகே வாகனங்களை சாலைகளில் அனுமதிக்கவேண்டும், அதற்கான சோதனை மையம் இந்தியாவில் இதுவரை இல்லை ஆனால் உலகின் பல நாடுகளில் அதனால் தரம் குறைந்த வண்டிகள் தடுக்கப்படுள்ளது 3. தண்டுவடம் பாதிப்படைந்தோருக்கு நலவாழ்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் ஆதரத்துக்கான முன்னெடுப்பு பணிகளில் அரசு இன்னும் கூடுதல் கவனம் தேவை |
|||||
by Swathi on 05 Sep 2016 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|