15 நாடுகள் கூட்டு முயற்சியில் ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு ஆகாயத்தில் உருவாக்கப்பட்ட இந்த 4,50,000 கிலோ எடையுள்ள விண்வெளி ஓடம் 2016 ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும். இது பூமியில் நடக்கிற நிகழ்வுகளையும் பூமிக்கு வெளியே அண்டத்தில் நடக்கிற நிகழ்வுகளையும் ஆராய விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பிற்காக பல்வேறு குழுக்கள் மேலே சென்று பல்வேறு பணிகளை செய்து வருகிறது. ஆறு பேர் கொண்ட 32-வது குழு கடந்த மாதம் ஜூலை 1 முதல் செப்டெம்பர் 17 வரை விண்வெளி நிலையத்தில் தங்கி பணியாற்ற அங்கு சென்றுள்ளது. இந்த குழுவில் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்சும் இடம்பெற்றுள்ளார். 240 சோதனைகளை செய்யவுள்ள அக்குழுவினரில் சுனிதா வில்லியம்ஸ் நாளை விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து 6 1/2 மணிநேரம் ஆகாயத்தில் நடந்தவாறு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரிசெய்கிறார்கள்.
|