டமாஸ்கஸ், சிரியாவில், கிளர்ச்சியாளர்களுடன் நடக்கும் தொடர் போராட்டத்தால், தலைநகர் டமாஸ்கஸ் அருகே, நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, அரசு படைகள் நடத்தும் தாக்குதலில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதிபர் ஆசாத்தை, பதவி விலகும்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால், சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள், சிரிய அதிபரை ஆதரிப்பதால், அந்நாட்டின் மீது, முழு பொருளாதார தடையை அமல்படுத்த முடியவில்லை. எனவே, கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத உதவி செய்து வருகிறது. இதை தொடர்ந்து அந்நாட்டில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
|