சிரியாவில் பஷர் அல்-ஆசாத் தலைமையில் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. ரஷ்யாவின் நேச நாடாக இருக்கும் சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த புரட்சிப் படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு ராணுவத்தினர் மீது புரட்சிப் படையினர் எதிர் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், புரட்சிப் படையினர் பதுங்கியுள்ள இடங்களின் மீது விமானப் படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானப்படையின் பலத்தை குறைத்துவிட்டால், அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டு புரட்சிப்படையினரும் விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்நிலையில் சிரியாவின் விமானப்படை தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். புரட்சிப் படையினர் அங்கிருந்த 16 விமானப்படை வீரர்களையும் கைது செய்தனர்.
|