சென்னையில் கடந்த 7-ந் தேதி உலகத் தமிழாய்வு மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது.
மாநாட்டில் தமிழிசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கருவிகளைக் கோசை நாகராசன் குழுவினர் மாநாட்டில் இசைத்து மக்களை அசத்தினர்.
நரம்பிசை கருவிகள், தோற்கருவிகள், காற்றிசைக் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
மகுட மேளம், பெரிய மேளம், பம்பை மேளம், துடுப்பு மேளம் , கொட்டு மேளம், எருதுகட்டு மேளம், மொடா மத்தளம், கயிலாய மேளம், கொம்பு வாத்தியம், நெடுந்தாரை, உருமி ஆகிய தமிழ்ப் பண்பாட்டு மேளங்கள் ஆகியவை மாநாட்டிற்கு வருகை தந்த மக்களின் கண்களைக் கவர்ந்தன.
|