|
|||||
மதுரையில் டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு! |
|||||
உலகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு, மதுரையில் டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் நடக்கிறது என எழுமின் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, எழுமின் அமைப்பின் இயக்குநர் ஜெகத் கஸ்பார் ராஜ் கூறியதாவது: பேரரசுகளாக ஆட்சி செய்த தமிழர்கள், 19ஆம் நூற்றாண்டுக்கு பிறகு உலகின் கூலிகளாக வீழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், கடின உழைப்பால் 20ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று இன்று உலகின் 180 நாடுகளில் தமிழர்கள் குறிப்பிடும் வகையில் கல்வி, அரசியல், வணிகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உயர்ந்துள்ளனர். இருப்பினும் தமிழ்ச் சமூகத்தினர் வேலைதேடுவதையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு உள்ளனர். இந்நிலையை மாற்றி, வேலைதரும் தொழில்முனைவோராக மாற்றும் வகையில் எழுமின் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், சி.கே. பிரகலாத் மையம், முதல் உலக சமூகம் அமைப்பு, பில்லர் தொழில்முனைதல்-மேலாண்மை கல்லூரி ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் தொழில் முனைவோர், திறனாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் ரூ.50 லட்சம் முதல் ரூ.500 கோடி வரையிலான மதிப்பில் தொழில் நடத்தும் தமிழர்களாக உள்ள 17 நாடுகளில் இருந்து வந்து தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். தங்கள் நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் ஆலோசனைகள் தருகின்றனர். புதிய தொழில்களை தொடங்கவும், நூற்றுக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் தொழில் முனைவோராக வர விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். ஆனால், தொழில் தொடங்குவதற்கான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் மதுரையில் உள்ள பில்லர் கல்வி நிறுவன வளாகத்தில் டிச.28, 29, 30 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார். பெண் தொழில் முனைவோருக்கும் சிறப்பு அமர்வு நடைபெறும். இந்தத் தகவல்களை ஜெகத் கஸ்பார் ராஜ் தெரிவித்து உள்ளார். |
|||||
by Mani Bharathi on 11 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|