LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மதுரையில் டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு!

உலகத் தமிழ் தொழில்முனைவோர்  மாநாடு, மதுரையில் டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் நடக்கிறது என எழுமின் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, எழுமின் அமைப்பின் இயக்குநர் ஜெகத் கஸ்பார் ராஜ் கூறியதாவது:

பேரரசுகளாக ஆட்சி செய்த தமிழர்கள், 19ஆம் நூற்றாண்டுக்கு பிறகு உலகின் கூலிகளாக வீழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், கடின உழைப்பால் 20ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று இன்று உலகின் 180 நாடுகளில் தமிழர்கள் குறிப்பிடும் வகையில் கல்வி, அரசியல், வணிகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உயர்ந்துள்ளனர். 

இருப்பினும் தமிழ்ச் சமூகத்தினர் வேலைதேடுவதையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு உள்ளனர். இந்நிலையை மாற்றி, வேலைதரும் தொழில்முனைவோராக மாற்றும் வகையில் எழுமின் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், சி.கே. பிரகலாத் மையம், முதல் உலக சமூகம் அமைப்பு, பில்லர் தொழில்முனைதல்-மேலாண்மை கல்லூரி ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் தொழில் முனைவோர், திறனாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் ரூ.50 லட்சம் முதல் ரூ.500 கோடி வரையிலான மதிப்பில் தொழில் நடத்தும் தமிழர்களாக உள்ள 17 நாடுகளில் இருந்து வந்து தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.  தங்கள் நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் ஆலோசனைகள் தருகின்றனர். 

புதிய தொழில்களை தொடங்கவும், நூற்றுக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட  உள்ளது.  இந்த மாநாட்டில் தொழில் முனைவோராக வர விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். ஆனால், தொழில் தொடங்குவதற்கான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் மதுரையில் உள்ள பில்லர் கல்வி நிறுவன வளாகத்தில் டிச.28, 29, 30 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடைபெறுகிறது. 

மாநாட்டை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார். பெண் தொழில் முனைவோருக்கும் சிறப்பு அமர்வு நடைபெறும். 

இந்தத் தகவல்களை ஜெகத் கஸ்பார் ராஜ் தெரிவித்து உள்ளார்.

by Mani Bharathi   on 11 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.