நியூயார்க்,ஆகஸ்ட்.5 : அமெரிக்காவினால் அனுப்பி வைக்கப்பட்ட ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட எட்டு மாத பயணத்திற்கு பின்னர் இன்று காலை 11 மணியளவில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உள்ளது.ரோவரில் உள்ள க்யூரியாசிட்டி என்ற அதிநவீன வாகனம் தான் செவ்வாய் கிரகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் விஞ்ஞானிகளுக்கு அவ்வப்போது படம் பிடித்து காட்ட உள்ளது. இரண்டு மாத காலம் க்யூரியசிட்டி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலம் இறங்கும் காட்சியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுள்ளது.
|