நியூயார்க் : கடந்த 2001-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதியை நாம் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. அன்று அமெரிக்காவில் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 19 பேர் விமானங்களை கடத்தி முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவுப்பகுதியில் அழகும் ஆச்சர்யமும் ஒருங்கே இனைந்து காட்சியளித்த உலக வர்த்தக மையத்தின் வடக்கு மற்றும் தென் பகுதியில் விமானத்தை கொண்டு தீவிரவாதிகள் தாக்கியதில், சில மணி நேரத்தில் புகைமண்டலத்துக்கு இடையே 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரம் சீட்டுக்கட்டு போல் சரிக்கப்பட்டது. ஏறத்தாழ 3,000 பேர் வரை இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தனர். அந்த நிகழ்வின் 11-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி இன்று இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் உள்ள நினைவிடமான, கிரவுண்ட் ஜீரோவில் நடைபெறுகிறது. முன் இருந்ததை விட மிக நவீன வசதிகளுடன் கிரவுண்ட் ஜீரோவுக்கு அருகிலேயே மீண்டும் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நினைவு தினத்துக்குள் இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்டிடங்கள் இங்கு கட்டப்படுகின்றன.
|