பெய்ஜிங், ஆகஸ்ட் 16 : சீனாவின் வெளியுறவு துணை மந்திரி ப்யூ-இங், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தலைவர்களுடன் சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய ப்யூ-இங் செய்தியாளர்களிடம் கூறியது,
இந்தியாவும் சீனாவும் நட்புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் இல்லை. கடந்த காலங்களில் இரண்டு நாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் வலுவான முன்னேற்றத்தையே நாங்கள் கண்டுள்ளோம். தென் கிழக்கு ஆசியப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்களின் வலிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சீன மந்திரியின் இந்த பேட்டி மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சார்க் நாடுகளிடையே வெளிப்படையான ஒத்துழைப்பு பற்றி சீனா பேசுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங், ஆகஸ்ட் 16 : சீனாவின் வெளியுறவு துணை மந்திரி ப்யூ-இங், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தலைவர்களுடன் சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய ப்யூ-இங் செய்தியாளர்களிடம் கூறியது, இந்தியாவும் சீனாவும் நட்புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் இல்லை. கடந்த காலங்களில் இரண்டு நாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் வலுவான முன்னேற்றத்தையே நாங்கள் கண்டுள்ளோம். தென் கிழக்கு ஆசியப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்களின் வலிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சீன மந்திரியின் இந்த பேட்டி மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சார்க் நாடுகளிடையே வெளிப்படையான ஒத்துழைப்பு பற்றி சீனா பேசுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
|