உலகம் தழுவிய தமிழ்க்கையெழுத்து விழாவைசென்னையில் சகாயம் ஐ. ஏ. எஸ்.,தொடங்கி வைத்தார்.
சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில், மக்கள் பாதை அமைப்பு சார்பில், 'தமிழ் கையெழுத்து இயக்கம்' உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் என ஒரு கோடி கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் தோறும் மக்கள் பாதை அமைப்பினர் படிவங்களில் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம்,எஸ். ஐ. ஜி. ஏ. தொழில் நுட்பக் கல்லூரியில்தமிழ்க்கையெழுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
"தாய்மொழியில் கையெழுத்துநம் அடையாளம் என்றும், தாய்மொழி, நம் தாயும் அவள் பிறப்புக்கு காரணமான பல்லாயிரம்தாய்களும் பேசி, சுவாசித்தது" என்றும் தமிழ்க் கையெழுத்து விழாவின் தாரக மந்திரமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
|