லண்டன் : "விக்கி லீக்ஸ்" நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், ஈக்வடார் நாட்டு தூதரகத்தை விட்டு வெளியே வரும் போது, கைது செய்ய லண்டன் போலீசார் முடிவெடுத்துள்ளனர். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களையும் திடுக்கிடும் தகவல்களையும், "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்த வழக்கு தொடர்பாக, சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்ததுள்ளது. சுவீடன் கோரிக்கையின் படி, இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் லண்டன் கோர்ட் இவருக்கு, ஜாமின் வழங்கியது. அமெரிக்காவிடம் தாம் ஒப்படைக்கப்பட்டால் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக தனக்கு மரண தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா, தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஈக்வடார் அதிபர் ஒப்புதல் அளித்தாலும், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தை விட்டு அசாஞ்ச் வெளியே வரும் போது அவர் கைது செய்யப்பட உள்ளார்.
|