LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

நேபாளத்தில் கி.மு.6ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய புத்தர் கோவில் கண்டுபிடிப்பு !!

நேபாளத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மிகப்பழமையான புத்த வழிபாட்டுத்தலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த அகழ்வாராய்ச்சியின் மூலம், புத்தர் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.6ம் நூற்றாண்டில் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நேபாளத்தில் பிரபலமான கோயில் லும்பினியில் உள்ள மாயாதேவி கோயில்.  லும்பினியில் உள்ள மாயாதேவி கோயில் அருகில் மாயாதேவியின் நந்தவனம் இருந்த இடத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இதில் மிகப்பழமையான வழிபாட்டுதலம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது. புத்தருடைய வரலாற்றில், அவரது தாயார் மாயாதேவி தாய்மையுற்று இருந்தபோது மரங்கள் அடர்ந்த நந்தவனத்தில் புத்தரை பெற்றெடுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக தற்போது உள்ள மாயாதேவி கோயில் அருகில் மரங்கள் அடர்ந்த நந்தவனம் இருந்ததற்கான அடையாளங்களும், மேற்கூரையில்லாத வழிபாட்டுதல இடிபாடுகளும் கிடைத்துள்ளது. இவை கி.மு.6ம் நூற்றண்டைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

 

இதனால் புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு, உண்மை என்றும், அவர் பிறந்த இடமான மரம் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் புத்தர் 6ம் நூற்றாண்டிலேயே பிறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பே புத்தர் பிறந்த காலமான கி.மு.3ம் நூற்றாண்டிலேயே அசோக சக்கரவர்த்தியும் பிறந்ததாக கருதப்பட்டது. அவர் வங்கதேசம் முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான பகுதியை ஆட்சி செய்தபோது புத்த சமயத்தை பின்பற்றி பரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 27 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.