LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகம் முழுவதும் தமிழிசை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது- இசைக்கல்லூரி முதல்வர் தகவல்!

உலகம் முழுவதும் தமிழிசை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது என இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி கூறினார்.

சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இசைப்பேராசிரியர் முனைவர் இரா.மாதவி, உலா இலக்கியங்ஙளும், நடனமும் என்னும் பொருளில் உரை நிகழ்த்தினார்.

சென்னை இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி பேசியதாவது:

பாடலுக்கு ஏற்ற இசையும்,  அதற்கேற்ற நடனங்களையும் நிகழ்த்துவது பண்டைக் காலத்தில் இருந்தே தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகின்றது.

இருப்பினும் தமிழ் மொழி எப்படி பல்வேறு காலகட்டங்களில் அன்னிய மொழிகளின் தாக்கத்திற்கு ஆளானதோ, அது போலவே தமிழிசையும் பாதிப்பிற்கு உள்ளானது.

தமிழ்ப்பாடலுக்கு இசையமைத்துப் பாடுவதும், தமிழிசையை அறங்கேற்றம் செய்வதும், ஒரு குற்றமாகவே பார்க்கப்பட்டது. இப்படி தமிழிசையை அறங்கேற்றம் செய்தவர்களை சபாக்களில் இருந்தே நீக்கிய வரலாறும் உண்டு.

வரலாற்றுக் காலங்களில் ஜமீன்தார்களுக்கும், மன்னர்களுக்கும் இசை நிகழ்ச்சிகள் தஞ்சையை மையமாக வைத்தே நடத்தப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களை மகிழ்விக்க சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வாறு சென்னைக்குப் பல இசைக் கலைஞர்கள் இடம் பெயர்ந்தனர். அப்போதெல்லாம் தமிழ்ப்பண்களுக்கு, தெலுங்குப் பாடல்களே பாடிய நிலை இருந்தது. இந்தப் பாடல்களை மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையே இருந்து வந்தது.

தமிழிசைக்கு ஒரு எழுச்சி ஏற்பட்டது என்றால், அது 20-ம் நூற்றாண்டில் தான். அப்ரகாம் பண்டிதர், ரா.சு. சண்முகம் செட்டியார் ஆகியோரால் அது நிகழ்ந்தது எனலாம். சென்னையில் தமிழிசைச் சங்கம் அமைத்து, தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைத்துப் பாடும் முறையும், அதற்கேற்ப நடனங்களை அரங்கேற்றம் செய்யும் கலையும் படிப்படியாக அக்காலத்திலேயே வளர்ந்து வந்தது.

உலகம் முழுவதும் தமிழிசைக்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இன்று பல்வேறு நாடுகளில் தேவாரம், திருவாசகம், உலா இலக்கியங்களுக்கு இசையமைத்துப் பாடுவதோடு, அதற்கேற்ப நடன அரங்கேற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சென்னை இசைக் கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி பேசினார்.

உலகத்தமிழாரய்ச்சி நிறுவன வழிகாட்டுதலுடன். இந்த ஆண்டு உலகத் தமிழிசை மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியருமான கு.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் தலைமை தாங்கினார்.அண்ணா பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் அருட்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

by Mani Bharathi   on 09 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.