|
|||||
'நீட்' நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது! |
|||||
மருத்துவப் படிப்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான, 'ஆன்லைன்' பதிவு தொடங்கியது. பிளஸ்- 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை, இந்த நுழைவுத் தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது. இந்த ஆண்டு முதல், தேசியத் தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது. நீட் தேர்வுக்கான அட்டவணை, என்.டி.ஏ., சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.மே, 5ல், நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும். இந்த முறை, தமிழ் உட்பட, 10க்கும் மேற்பட்ட, மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். மாணவர்களின் வசதிக்காக, நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வில், தமிழ் போன்ற மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றின் மொழி மாற்றத்தின் போது பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே, பதில் எழுத வேண்டும். விடை திருத்துவதும் அதன் அடிப்படையிலேயே செய்யப்படும் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்து உள்ளது |
|||||
by Mani Bharathi on 01 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|