LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !!

பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய உலகில் மிக உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும்.  

இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு, டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் தமிழ் மொழிக்கான விருது, பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.

பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின்  வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.

அஞ்ஞாடி  நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம்,  பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி,  நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள்,  ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

மேலும் 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சத்தினால் அபோது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை கண்முன் நிறுத்தும் விதமாக அத்தனை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது 'அஞ்ஞாடி' .

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: Agnaadi   Writter Poomani   Sahitya Academy Award   எழுத்தாளர் பூமணி   அஞ்ஞாடி   சாகித்ய அகாடமி விருது     
 தொடர்புடையவை-Related Articles
எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !! எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.