LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்

 

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை 
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் 
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள் 
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605 
புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் 
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் 
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட 
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606 
தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் 
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக் 
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு 
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607 
அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் 
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் 
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் 
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608 
விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை 
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் 
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே 
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609 
புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு 
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே 
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் 
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610 
நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே 
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே 
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் 
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611 
பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் 
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே 
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச் 
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612 
சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் 
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் 
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் 
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613 
புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர் 
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் 
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் 
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614 

 

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை 

ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் 

ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள் 

போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605 

 

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் 

மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் 

நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட 

தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606 

 

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் 

யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக் 

கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு 

போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607 

 

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் 

கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் 

செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் 

பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608 

 

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை 

உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் 

அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே 

புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609 

 

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு 

இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே 

திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் 

நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610 

 

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே 

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே 

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் 

பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611 

 

பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் 

அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே 

திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச் 

திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612 

 

சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் 

போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் 

ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் 

போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613 

 

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர் 

மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் 

தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் 

அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.