LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

யாரோ ஒருவன் - இது புதுமுகங்கள் நடிக்கும் திகில் படம் !!

நவகிரகா சினி ஆர்ட்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் “ யாரோ ஒருவன் “ இந்த படத்தில் ராம் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, ஒரியன், சான்ரா  ஆகியோர் நடிக்கிறார்கள்.


பாடல்கள்   -  செல்வோவியன், கே.என்.பைஜூ


கலை   -  ராகு


நடனம்   -   ரமேஷ் ரெட்டி


தயாரிப்பு   -  நவகிரகா சினி ஆர்ட்ஸ்


கதை,திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அமைத்து இயக்குகிறார் கே.என்.பைஜூ.


படம் பற்றி இயக்குனர் கூறுகையில்....


நான் தேசிய விருது பெற்ற மளையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவியாளராக பணியாற்றியதுடன் பல தொலைகாட்சி தொடர்களை இயக்கி இருக்கிறேன்.


என் முதல் படத்தில் எல்லா தொழில்நுட்ப வேலைகளையும் நான் செய்ததற்கு காரணமே எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டதால்தான்.


காணாமல் போன தனது மனைவியை தேடிச் செல்லும் ராம் மற்றும் துப்பறியும் நிபுணர் மற்றும் அவரது குழுக்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் படத்தின் கதை! திகிலும், மர்மங்களும் நிறைந்த காடு மற்றும் வீடு போன்றவற்றால் அவர்களுக்கு பிரச்சனைகள் திகில் நிறைந்ததாக இருக்கும்.


அதற்காக தென்மலை, அச்சன்கோயில், கட்லப்பாறை போன்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம்.காட்டு விலங்குகள், விஷ பூச்சிகள்,பாம்பு மற்றும் புதைகுழி, இயற்கை ,மாற்றங்கள் எல்லாவற்றையும் உயிரை பணயம் வைத்து கடந்து நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.


ரசிகர்களுக்கு இது திகில் அனுபவமாக இருக்கும் என்றார் இயக்குனர் கே.என்.பைஜூ.

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Yaro Oruvan   யாரோ ஒருவன்   திரில்லர் திரைப்படம்   நவகிரகா சினி ஆர்ட்ஸ்   கே.என்.பைஜூ        
 தொடர்புடையவை-Related Articles
யாரோ ஒருவன் - இது புதுமுகங்கள் நடிக்கும் திகில் படம் !! யாரோ ஒருவன் - இது புதுமுகங்கள் நடிக்கும் திகில் படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.