|
|||||
யாரோ ஒருவன் - இது புதுமுகங்கள் நடிக்கும் திகில் படம் !! |
|||||
நவகிரகா சினி ஆர்ட்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் “ யாரோ ஒருவன் “ இந்த படத்தில் ராம் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, ஒரியன், சான்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். பாடல்கள் - செல்வோவியன், கே.என்.பைஜூ கலை - ராகு நடனம் - ரமேஷ் ரெட்டி தயாரிப்பு - நவகிரகா சினி ஆர்ட்ஸ் கதை,திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அமைத்து இயக்குகிறார் கே.என்.பைஜூ. படம் பற்றி இயக்குனர் கூறுகையில்.... நான் தேசிய விருது பெற்ற மளையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவியாளராக பணியாற்றியதுடன் பல தொலைகாட்சி தொடர்களை இயக்கி இருக்கிறேன். என் முதல் படத்தில் எல்லா தொழில்நுட்ப வேலைகளையும் நான் செய்ததற்கு காரணமே எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டதால்தான். காணாமல் போன தனது மனைவியை தேடிச் செல்லும் ராம் மற்றும் துப்பறியும் நிபுணர் மற்றும் அவரது குழுக்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் படத்தின் கதை! திகிலும், மர்மங்களும் நிறைந்த காடு மற்றும் வீடு போன்றவற்றால் அவர்களுக்கு பிரச்சனைகள் திகில் நிறைந்ததாக இருக்கும். அதற்காக தென்மலை, அச்சன்கோயில், கட்லப்பாறை போன்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம்.காட்டு விலங்குகள், விஷ பூச்சிகள்,பாம்பு மற்றும் புதைகுழி, இயற்கை ,மாற்றங்கள் எல்லாவற்றையும் உயிரை பணயம் வைத்து கடந்து நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். ரசிகர்களுக்கு இது திகில் அனுபவமாக இருக்கும் என்றார் இயக்குனர் கே.என்.பைஜூ. |
|||||
by Swathi on 01 Nov 2014 0 Comments | |||||
Tags: Yaro Oruvan யாரோ ஒருவன் திரில்லர் திரைப்படம் நவகிரகா சினி ஆர்ட்ஸ் கே.என்.பைஜூ | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|