LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐஞ்சிறு காப்பியங்கள்

யசோதர காவியம் பகுதி -1

 

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.
இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு. 
தற்சிறப்புப்பாயிரம்
கடவுள் வாழ்த்து
1. உலக மூன்று மொருங்குணர் கேவலத்
தலகி லாத வனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.
2 நாத னம்முனி சுவ்வத னல்கிய 
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள் 
ஏத மஃகி யசோதர னெய்திய 
தோத வுள்ள மொருப்படு கின்றதே.
அவையடக்கம்
3 உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென 
எள்ளு கின்றன ரில்லை விளக்கினை 
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர் 
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.
நூல் நுவல் பொருள்
4 மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் 
பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும் 
வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத் 
தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.
நூல்
முதற் சருக்கம்
நாட்டுச் சிறப்பு
5 பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை 
நம்பு நீரணி நாடுள தூடுபோய் 
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ 
திம்ப ரீடில தௌதய மென்பதே.
நகரச் சிறப்பு்
6 திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய் 
வசை யிலாநகர் வானவர் போகமஃ 
தசைவி லாவள காபுரி தானலால் 
இசைவி லாதவி ராசபு ரம்மதே.
7 இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது 
மஞ்சு லாமதி சூடின மாளிகை 
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால் 
விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.
அரசனியல்பு
8 பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி 
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை 
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன் 
மாரி தத்தனென் பானுளன் மன்னவன்.
9 அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர் 
மருவு மானுயர் வானவர் போகமும் 
பொருவில் வீடு புணர்திற மும்மிவை 
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.
வேனில் வரவு
10 நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை 
சரிந்த காதற் றடையில தாகவே 
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள் 
விரிந்த தின்னிள வேனிற் பருவமே.
வசந்தமன்னனை வரவேற்றல்
11 கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன 
வாங்கு வாகை வளைத்தன சாமரை 
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி 
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.
இதுவுமது
12 மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர 
தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர் 
கலந்த காதன்மை காட்டுநர் போலவே 
வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.
அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்
13 உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட 
வயந்த மன்னவன் வந்தன னென்றலும் 
நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும் 
வயந்த மாடு வகையின ராயினர்.
14 கானும் வாவியுங் காவு மடுத்துடன் 
வேனி லாடல் விரும்பிய போழ்தினில் 
மான யானைய மன்னவன் றன்னுழை 
ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.
ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்
15 என்று மிப்பரு வத்தினோ டைப்பசி 
சென்று தேவி சிறப்பது செய்துமஃ 
தொன்று மோரல மாயின மொன்றலா 
நன்ற லாதன நங்களை வந்துறும்.
இதுவுமது
16 நோவு செய்திடு நோய்பல வாக்கிடும் 
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும் 
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் 
காவல் மன்ன கடிதெழு கென்றனர்.
அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்
17 என்று கூறலு மேதமி தென்றிலன் 
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால் 
நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத் 
தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.
தேவியின் கோயிலை அடைதல்
18 சண்ட கோபி தகவிலி தத்துவங் 
கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத் 
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை 
கண்ட மாரி தனதிட மெய்தினான்.
அரசன் மாரிதேவதையை வணங்குதல்
19 பாவ மூர்த்தி படிவ மிருந்தவத் 
தேவி மாட மடைந்து செறிகழன் 
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன் 
தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.
20 மன்ன னாணையின் மாமயில் வாரணம் 
துன்னு சூகர மாடெரு மைத்தொகை 
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள் 
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.
21 யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை 
ஈன மில்பலி யாக வியற்றினால் 
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில் 
ஆன பூசனை யாற்றுத லாற்றென.
22 வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை 
யீடி லாத வியல்பினி லில்வழி 
யேட சண்ட கருமதந் தீகென 
நாட வோடின னன்னகர் தன்னுளே.
அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்
23 ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந் 
தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச் 
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன் 
மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.
சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்
24 வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢ 
சிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி 
அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢ 
முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.
சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்
25 உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார் 
அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை 
யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும் 
துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.
சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்
26 அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி 
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர் 
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி 
நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.
இளைஞர் சரிகை செல்லுதல்
27 வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய் 
வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார் 
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட 
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.
இதுவுமது்
28 வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி 
நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி 
யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி 
நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.
மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்
29 அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க் 
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப் 
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று 
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.
இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்
30 எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல் 
தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச் 
சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான். 
இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.
31 வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித் 
தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல் 
அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில் 
தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்
32 நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை 
யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின் 
அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ 
மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்
33 அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால் 
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢ 
அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த 
நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.
34 அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந் 
தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின் 
நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம் 
மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.
35 கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும் 
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா 
இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும் 
பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.
36 பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத் 
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய் 
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே 
இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம்.
(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)
நரககதி வரலாறு
37 முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ 
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம் 
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள் 
உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.
விலங்குகதி வரலாறு
38 அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல் 
பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு 
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து 
நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.
மனுஷ்யகதி வரலாறு்
39 ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி 
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட 
பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு 
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.
தேவகதி வரலாறு
40 இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி 
வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந 
திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ. 
தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்
தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்
41 துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா 
அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத் 
தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே 
அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.
42 வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி 
தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக 
இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந் 
தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.
43 மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித் 
தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும் 
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும் 
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.
44 ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன் 
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ 
நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும் 
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.
அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்
45 அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின் 
நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி 
விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற 
கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.
இதுவுமது.
46 அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும் 
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந் 
திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.) 
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்
இதுவுமது
47 பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத் 
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி 
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி 
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.
48 இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம் 
நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை 
என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி 
இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.
இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.
49 ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி 
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி 
வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான் 
நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்
இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.
50 ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி 
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா 
குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின் 
யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘
இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்
51 உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப் 
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும் 
அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும் 
பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.
சித்தர் வணக்கம்
52 ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ் 
வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார் 
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித் 
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢
அருகர் வணக்கம்
53 பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற 
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும் 
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித் 
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.
ஆசார்¢யர் வணக்கம்
54 ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார 
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார் 
பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித் 
தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.
உபாத்தியாயர் வணக்கம்
55 அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப் 
பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட் 
டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த 
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.
சர்வசாது வணக்கம்
56 பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற 
கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச் 
சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச் 
சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.
57 இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு 
தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி 
முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக 
கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.
இளைஞர் புன்முறுவல் செய்தல்
58 கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால் 
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப 
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார். 
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.
இளைஞர் மன்னனை வாழ்த்துதல்
59 மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா 
தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச் 
சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று 
நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.
மன்னவன் மனமாற்ற மடைதல்
60 நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல் 
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார் 
அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால் 
நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்
அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்
61 இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல் 
நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன 
அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே 
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம்.
இதுவுமது
62 முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா 
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம் 
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு 
என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.
அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்
63 கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற் 
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே 
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும் 
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.
மன்னனும் வியத்தல்
64 மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி 
என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற 
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில் 
என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான். 
அபயருசியின் மறுமொழி
65 அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால் 
மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று 
பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல் 
அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.
வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்
66 அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி 
மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி 
என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று 
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.
அபயருசியின் அறவுரை
67 மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப் 
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல் 
அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண 
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்
இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.
68 எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார் 
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும் 
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ் 
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.
69 மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும் 
புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும் 
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ 
சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.
70 ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை 
விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும் 
ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா 
வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘
71 பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா 
லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென 
றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட் 
சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை
இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்
72 அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப் 
பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட 
திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான் 
உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.
இரண்டாவது சருக்கம்
உஞ்சயினியின் சிறப்பு
73 வளவயல் வாரியின் மலிந்த பல்பதி 
அளவறு சனபத மவந்தி யாமதின் 
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய 
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.
அசோகன் சிறப்பு
74 கந்தடு களிமத யானை மன்னவன் 
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன் 
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன் 
அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்
இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு
75 இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே 
சந்திர மதியொரு தனயற் றந்தனள் 
எந்துயர் களைபவ னெசோத ரன்னென 
நந்திய புகழவ னாம மோதினான்.
யசோதரன் மணம்
76 இளங்களி றுழுவையி னேத மின்றியே 
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் 
விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால் 
உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.
யசோமதியின் பிறப்பு
77 இளையவ ளெழினல மேந்து கொங்கையின் 
விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள 
கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள் 
வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.
இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.
78 மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி 
பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான் 
ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை 
யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.
இளமை நிலையாமை
79 வண்டளிர் புரைதிரு மேனி மாதரார 
கண்டக லுறவரு கழிய மூப்பிது 
உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன் 
வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.
துறவின் இன்றியமையாமை
80 இளமையி னியல்பிது வாய வென்னினிவ் 
வளமையி லிளமையை மனத்து வைப்பதென் 
கிளைமையு மனையதே கெழுமு நம்முளத 
தளைமையை விடுவதே தகுவ தாமினி.
81 முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை 
சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம் 
முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய 
மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.
யசோதரனுக்கு முடி சூட்டுதல்
82 இனையன நினைவுறீஇ யசோதர னெனுந் 
தனையனை நிலமகட் டலைவ னாகெனக 
கனை மணி வனைமுடி கவித்துக் காவலன 
புனைவளை மதிமதி புலம்பப் போயினான்.
யசோதரன் அரசியல்
அசோகன் துறவு
83 குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந் 
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன 
உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய் 
வரையுடை வனமது மருவி னானரோ.
84 எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக் 
கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன் 
அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த 
குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.
மன்னனின் மனமாட்சி
85 திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு 
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி 
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ 
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான். 
86 அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று 
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன் 
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில் 
தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்
87 தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால் 
பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல் 
ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும 
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.
யசோதரன் பள்ளியறை சேர்தல்
88 மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக 
கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற 
சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி 
கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.
அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்
89 சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக் 
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப 
நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல் 
அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.
இருவரும் இன்பம் நுகர்தல்
90 ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த 
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி 
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித் 
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢
இதுவுமது.
91 மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம 
அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற் 
படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக 
விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.
இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.
92 இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப 
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க் 
மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே 
தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்
பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்
93 ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச் 
சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும 
வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத் 
தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.
அரசி மதிமயங்குதல்
94 பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம் 
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். 
பெண்மையின் புன்மை
95 மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந 
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும் 
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா 
என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே
குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்
96 துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி 
யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை 
துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன் 
றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.
அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்
97 தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங் 
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை 
பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித் 
¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.
தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.
98 அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல் 
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும் 
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட 
¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.
அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.
99 என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே 
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும் 
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல் 
சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.
அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.
100 மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற் 
கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி 
நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை 
வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.
அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.
101 என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை 
தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன 
என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே 
துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே.
தோழி, பாகனைக் கண்டு மீளல்.
102 மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன் 
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே 
கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள் 
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்
(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்
103 மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத் 
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன் 
றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண் 
என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..
104 நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே 
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற் 
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன் 
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.
105 பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா 
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம் 
நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள் 
கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே
அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்
106 என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம 
¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும 
ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம் 
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ
107 காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல் 
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன் 
ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக் 
நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.
தோழியின் அச்சம்
108 தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான் 
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும் 
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ 
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.
இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.
109 ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1 
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப 
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே 
தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ .
110 தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு 
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள் 
முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ 
லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..
மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்
111 அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன் 
உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின் 
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத் 
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.
மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.
112 துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢ 
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக் 
கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண் 
செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.
அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்
113 கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் 
இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢ 
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே. 
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே
அரசி மூர்ச்சை யெய்துதல்
114 இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல் 
வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢ 
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢ 
மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.
அரசி மூர்ச்சை தௌ¤ந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்
115 தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி 
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢ 
விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள். 
வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢
அரசியின் உறுதிமொழி
116 பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங் 
கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ 
எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர் 
சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ.
மறைந்து நின்ற மன்னனின் செயல்
117 என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக் 
கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே 
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும் 
சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே
118 மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர் 
பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன் 
டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண் 
றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.
மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.
120 எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் 
மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத் 
திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை 
கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான்.
இதுவுமது
121 உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின் 
திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக் 
கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த 
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்
மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்
122 மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள் 
புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும் 
பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும் 
கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.
மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.
124 மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை 
சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச 
மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே 
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.
இதுவுமது
125 நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே 
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும் 
¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த் 
மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே. 
இதுவுமது.
126 புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய 
விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற 
தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி 
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான்.
சந்திரமதி ஐயுறல்.
127 மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா 
வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢ 
பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய 
துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.
அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.
128 விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே 
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக 
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ 
தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்
உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்
129 கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா 
இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த 
பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால 
விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்
130 ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின் 
மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற் 
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை 
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு
131 மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே 
கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே 
சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல 
கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள்.
மன்னன் நெறியறிந்து கூறல்
132 ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந் 
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி 
ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில் 
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.
133 என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா 
தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின் 
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய் 
மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான்.
134 யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல் 
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின் 
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி 
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.
135 அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள் 
கொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢ 
இன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால் 
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.
மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்
136 என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென் 
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே 
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து 
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள்.
137 மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக் 
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற் 
றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால் 
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான்.
138 உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும 
பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன 
செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான் 
அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான்.
139 மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய 
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே 
தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் 
ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.
மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்
140 மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட 
சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி 
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ 
மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.
141 என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி 
சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல 
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த 
கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.
142 ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை 
ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை 
ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன். 
ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.
அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்
143 இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித் 
தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான் 
அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான் 
எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள.
144 அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே 
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும் 
அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால் 
அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.
145 ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் 
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே 
தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான் 
தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.
146 நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக 
எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே 
வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள் 
¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.
மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்
147 நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் 
அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢ 
புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித் 
துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.
உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்
148 எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை 
கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின் 
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள் 
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.
விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்
149 தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண் 
காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ் 
சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார் 
ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம்.
நகரத்து அறிஞர் கூறுதல்
150 அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன் 
மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான் 
இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண 
சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார்.
151 இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும் 
நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக் 
கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள் 
மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.
152 இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண் 
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢ 
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே 
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.
யசோமதி முடிபுனைந்து அரசனாதல்
153 வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி 
யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச் 
சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான் 
ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.
154 இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் 
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம 
இனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை 
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். 

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.
இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு. 


தற்சிறப்புப்பாயிரம்
கடவுள் வாழ்த்து
1. உலக மூன்று மொருங்குணர் கேவலத்தலகி லாத வனந்த குணக்கடல்விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.
2 நாத னம்முனி சுவ்வத னல்கிய தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள் ஏத மஃகி யசோதர னெய்திய தோத வுள்ள மொருப்படு கின்றதே.

அவையடக்கம்
3 உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென எள்ளு கின்றன ரில்லை விளக்கினை உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர் கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.
நூல் நுவல் பொருள்
4 மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும் வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.

நூல்
முதற் சருக்கம்
நாட்டுச் சிறப்பு
5 பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை நம்பு நீரணி நாடுள தூடுபோய் வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ திம்ப ரீடில தௌதய மென்பதே.
நகரச் சிறப்பு்
6 திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய் வசை யிலாநகர் வானவர் போகமஃ தசைவி லாவள காபுரி தானலால் இசைவி லாதவி ராசபு ரம்மதே.
7 இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சு லாமதி சூடின மாளிகை அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால் விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.
அரசனியல்பு
8 பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன் மாரி தத்தனென் பானுளன் மன்னவன்.
9 அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர் மருவு மானுயர் வானவர் போகமும் பொருவில் வீடு புணர்திற மும்மிவை தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.
வேனில் வரவு
10 நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை சரிந்த காதற் றடையில தாகவே வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள் விரிந்த தின்னிள வேனிற் பருவமே.
வசந்தமன்னனை வரவேற்றல்
11 கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன வாங்கு வாகை வளைத்தன சாமரை கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி பாங்கு வண்டொடு பாடின தேனினம்.
இதுவுமது
12 மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர் கலந்த காதன்மை காட்டுநர் போலவே வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.
அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்
13 உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட வயந்த மன்னவன் வந்தன னென்றலும் நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும் வயந்த மாடு வகையின ராயினர்.
14 கானும் வாவியுங் காவு மடுத்துடன் வேனி லாடல் விரும்பிய போழ்தினில் மான யானைய மன்னவன் றன்னுழை ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.
ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்
15 என்று மிப்பரு வத்தினோ டைப்பசி சென்று தேவி சிறப்பது செய்துமஃ தொன்று மோரல மாயின மொன்றலா நன்ற லாதன நங்களை வந்துறும்.
இதுவுமது
16 நோவு செய்திடு நோய்பல வாக்கிடும் ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும் தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் காவல் மன்ன கடிதெழு கென்றனர்.
அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்
17 என்று கூறலு மேதமி தென்றிலன் சென்று நல்லறத் திற்றெளி வின்மையால் நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத் தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.
தேவியின் கோயிலை அடைதல்
18 சண்ட கோபி தகவிலி தத்துவங் கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத் தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை கண்ட மாரி தனதிட மெய்தினான்.
அரசன் மாரிதேவதையை வணங்குதல்
19 பாவ மூர்த்தி படிவ மிருந்தவத் தேவி மாட மடைந்து செறிகழன் மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன் தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.
20 மன்ன னாணையின் மாமயில் வாரணம் துன்னு சூகர மாடெரு மைத்தொகை இன்ன சாதி விலங்கி லிரட்டைகள் பின்னி வந்து பிறங்கின கண்டனன்.
21 யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை ஈன மில்பலி யாக வியற்றினால் ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில் ஆன பூசனை யாற்றுத லாற்றென.
22 வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை யீடி லாத வியல்பினி லில்வழி யேட சண்ட கருமதந் தீகென நாட வோடின னன்னகர் தன்னுளே.
அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்
23 ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந் தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச் சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன் மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.
சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்
24 வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢ சிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢ முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.
சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்
25 உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார் அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும் துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.
சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்
26 அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர் எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.
இளைஞர் சரிகை செல்லுதல்
27 வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய் வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார் கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.
இதுவுமது்
28 வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.
மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்
29 அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க் கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப் புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.
இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்
30 எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல் தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச் சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான். இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.
31 வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித் தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல் அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில் தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்
32 நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின் அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்
33 அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால் அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢ அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.
34 அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந் தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின் நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம் மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.
35 கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும் பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும் பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.
36 பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத் துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய் சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம்.
(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)
நரககதி வரலாறு
37 முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம் அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள் உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.
விலங்குகதி வரலாறு
38 அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல் பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.
மனுஷ்யகதி வரலாறு்
39 ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.
தேவகதி வரலாறு
40 இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ. தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்
தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்
41 துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத் தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.
42 வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந் தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.
43 மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித் தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும் அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும் ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.
44 ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன் மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும் பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.
அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்
45 அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின் நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.
இதுவுமது.
46 அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும் வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந் திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.) வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்
இதுவுமது
47 பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத் திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.
48 இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம் நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.
இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.
49 ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான் நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்
இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.
50 ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின் யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘
இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்
51 உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப் பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும் அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும் பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.
சித்தர் வணக்கம்
52 ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ் வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார் வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித் தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢
அருகர் வணக்கம்
53 பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும் உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித் திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.
ஆசார்¢யர் வணக்கம்
54 ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார் பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித் தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.
உபாத்தியாயர் வணக்கம்
55 அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப் பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட் டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.
சர்வசாது வணக்கம்
56 பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச் சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச் சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.

57 இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.
இளைஞர் புன்முறுவல் செய்தல்
58 கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால் இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார். மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.
இளைஞர் மன்னனை வாழ்த்துதல்
59 மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச் சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.
மன்னவன் மனமாற்ற மடைதல்
60 நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல் மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார் அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால் நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்
அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்
61 இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல் நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம்.
இதுவுமது
62 முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம் மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.
அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்
63 கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற் பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும் பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.
மன்னனும் வியத்தல்
64 மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில் என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான். 
அபயருசியின் மறுமொழி
65 அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால் மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல் அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.
வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்
66 அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.
அபயருசியின் அறவுரை
67 மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப் பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல் அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்
இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.
68 எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார் அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும் மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ் செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.
69 மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும் புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும் கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.
70 ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும் ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘
71 பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட் சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை
இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்
72 அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப் பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான் உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.

இரண்டாவது சருக்கம்
உஞ்சயினியின் சிறப்பு
73 வளவயல் வாரியின் மலிந்த பல்பதி அளவறு சனபத மவந்தி யாமதின் விளைபய னமரரும் விரும்பு நீர்மைய துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.
அசோகன் சிறப்பு
74 கந்தடு களிமத யானை மன்னவன் இந்திர னெனுந்திற லசோக னென்றுளன் சந்திர மதியெனு மடந்தை தன்னுடன் அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்
இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு
75 இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே சந்திர மதியொரு தனயற் றந்தனள் எந்துயர் களைபவ னெசோத ரன்னென நந்திய புகழவ னாம மோதினான்.
யசோதரன் மணம்
76 இளங்களி றுழுவையி னேத மின்றியே வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால் உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.
யசோமதியின் பிறப்பு
77 இளையவ ளெழினல மேந்து கொங்கையின் விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள் வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.
இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.
78 மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான் ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.
இளமை நிலையாமை
79 வண்டளிர் புரைதிரு மேனி மாதரார கண்டக லுறவரு கழிய மூப்பிது உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன் வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.
துறவின் இன்றியமையாமை
80 இளமையி னியல்பிது வாய வென்னினிவ் வளமையி லிளமையை மனத்து வைப்பதென் கிளைமையு மனையதே கெழுமு நம்முளத தளைமையை விடுவதே தகுவ தாமினி.
81 முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம் முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.
யசோதரனுக்கு முடி சூட்டுதல்
82 இனையன நினைவுறீஇ யசோதர னெனுந் தனையனை நிலமகட் டலைவ னாகெனக கனை மணி வனைமுடி கவித்துக் காவலன புனைவளை மதிமதி புலம்பப் போயினான்.
யசோதரன் அரசியல்
அசோகன் துறவு
83 குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந் தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய் வரையுடை வனமது மருவி னானரோ.
84 எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக் கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன் அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.
மன்னனின் மனமாட்சி
85 திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான். 
86 அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன் புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில் தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்
87 தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால் பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல் ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.
யசோதரன் பள்ளியறை சேர்தல்
88 மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.
அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்
89 சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக் கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல் அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.
இருவரும் இன்பம் நுகர்தல்
90 ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித் தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢
இதுவுமது.
91 மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற் படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.
இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.
92 இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க் மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்
பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்
93 ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச் சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத் தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.
அரசி மதிமயங்குதல்
94 பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம் விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். பெண்மையின் புன்மை
95 மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும் பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே
குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்
96 துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன் றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.
அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்
97 தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங் கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித் ¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.
தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.
98 அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல் கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும் நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட ¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.
அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.
99 என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும் நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல் சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.
அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.
100 மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற் கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.
அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.
101 என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே.
தோழி, பாகனைக் கண்டு மீளல்.
102 மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன் ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள் தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்
(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்
103 மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத் தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன் றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண் என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..
104 நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற் குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன் நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.
105 பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம் நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே
அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்
106 என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம ¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம் நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ
107 காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல் காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன் ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக் நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.
தோழியின் அச்சம்
108 தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான் ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும் பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.
இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.
109 ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1 கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ .
110 தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள் முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..
மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்
111 அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன் உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின் விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத் துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.
மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.
112 துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢ மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக் கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண் செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.
அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்
113 கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢ புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே. துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே
அரசி மூர்ச்சை யெய்துதல்
114 இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல் வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢ தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢ மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.
அரசி மூர்ச்சை தௌ¤ந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்
115 தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢ விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள். வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢
அரசியின் உறுதிமொழி
116 பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங் கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர் சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ.
மறைந்து நின்ற மன்னனின் செயல்
117 என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக் கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும் சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே
118 மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர் பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன் டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண் றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.
மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.
120 எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத் திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான்.
இதுவுமது
121 உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின் திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக் கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்
மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்
122 மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள் புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும் பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும் கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.
மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.
124 மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.
இதுவுமது
125 நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும் ¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த் மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே. 
இதுவுமது.
126 புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான்.
சந்திரமதி ஐயுறல்.
127 மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢ பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.
அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.
128 விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்
உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்
129 கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்
130 ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின் மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற் கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு
131 மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள்.
மன்னன் நெறியறிந்து கூறல்
132 ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந் தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில் தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.
133 என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின் என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய் மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான்.
134 யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல் வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின் ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.
135 அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள் கொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢ இன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால் நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.
மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்
136 என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென் சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள்.
137 மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக் கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற் றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால் வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான்.
138 உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான் அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான்.
139 மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.
மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்
140 மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.
141 என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.
142 ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன். ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.
அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்
143 இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித் தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான் அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான் எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள.
144 அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும் அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால் அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.
145 ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான் தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.
146 நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள் ¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.
மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்
147 நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢ புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித் துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.
உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்
148 எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின் மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள் பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.
விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்
149 தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண் காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ் சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார் ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம்.
நகரத்து அறிஞர் கூறுதல்
150 அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன் மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான் இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார்.
151 இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும் நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக் கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள் மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.
152 இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண் வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢ புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.
யசோமதி முடிபுனைந்து அரசனாதல்
153 வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச் சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான் ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.
154 இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம இனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். 

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.