LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐஞ்சிறு காப்பியங்கள்

யசோதர காவியம் பகுதி -2

 

மூன்றாஞ் சருக்கம்
யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்
155 மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர் 
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப் 
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் 
புற்ற தாகு முரைக்குறு கின்றதே.
157 அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன் 
வம்பு வாரண முட்டையின் வைத்துடன் 
கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென 
நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.
158 சந்தி ரம்மதி யாகிய தாயவள் 
வந்து மாநக ரப்புறச் சேரிவாய 
முந்து செய்வினை யான்முளை வாளெயிற் 
றந்த மிக்க சுணங்கம் தாயினாள்.
159 மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக் 
கியலு பாயன மென்று கொடுத்தனர் 
மயரி யாகு மிசோமதி மன்னவன 
இயலு மாளிகை யெய்தின வென்பவே.
160 மன்ன னாகிய மாமயின் மாளிகை 
தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத் 
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண் 
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .
161 அஞ்சி லோதியர் தாமடி தைவரப் 
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் 
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ 
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.
162 சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் 
தரைய மேகலை யாரி மைர்ந்துணும 
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய 
இரைய வாவி யிருந்தயில் கின்றதே.
163 வந்து குப்பையின் மாசன முண்டபின் 
சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் 
றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச் 
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே
164 நல்வ தத்தொ டறத்திற நண்ணலார 
கொல்வ தற்குள முன்செய் கொடுமையான 
ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் 
வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.
165 மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை 
யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை 
முற்று வார்முலை யாண்முயங் குந்திறம 
மற்ற மாமயில் வந்தது கண்டதே.
166 அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி 
ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின 
தப்பி லன்னது சாரன்றன் கண்களைக் 
குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.
167 முத்த வாணகை யாண்முனி வுற்றனள் 
கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும் 
மத்த கத்தை மடுத்து மறித்தது 
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.
168 தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள் 
நாய்பின் னோடி நலிந்தது கவ்விய 
வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது 
தீமை செய்வினை செய்திற மின்னதே.
169 நாயின் வாயில் நடுங்கிய மாமயில் 
போய தின்னுயிர் பொன்றின மன்னவன் 
ஆயு மாறறி யாத விசோமதி 
நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.
யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
170 மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி 
துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை 
இன்னல் செய்யுமோ ரேனம தாகிய 
தன்ன தாகு மருவினை யின்பயன்..
171 சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் 
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய 
அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர் 
வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.
172 தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற் 
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர் 
பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ 
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.
மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்
173 மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் 
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் 
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர் 
மன்னு மீனின் வடிவின தாயிற்றே.
சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்
174 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் 
முந்து சன்று முதலைய தாயது¢ 
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான 
உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.
175 அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் 
வந்து வாயின் மடுத்தது கொண்டது¢ 
கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் 
தந்த கொல்கென மன்னவன் சாற்றினான்
176 வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின 
சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢ 
கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர் 
அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.
சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
177 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் 
வந்து வார்வலைப் பட்ட கராமரித 
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் 
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.
178 மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை 
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர் 
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் 
குற்ற செய்கைக் குரித்தென வோதினார்.
179 அறுத்த மீனி னவயவ மொன்றினைக் 
கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர 
இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன 
சிறக்க வென்றனர் தீவினை யாளரே.
180 நின்ற கண்டத்து நீளுயிர் போமது 
சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது 
தின்று தின்று துறக்கத் திருத்துதல் 
நன்று நன்றென நைந்திறந் திட்டதே
மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்
181 மன்னன் மாமயில் சூகர மாயமீன் 
முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர 
மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின 
தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.
தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.
182 தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢ 
ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர 
பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின 
தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.
183 தாய்வ யிற்கரு வுட்டக ராயது 
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன 
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன 
தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்.
184 வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை 
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத் 
தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென 
ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.
யசோமதி பலியிடும் செய்தி கூறல்
185 மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன் 
பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய் 
உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான் 
கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.
186 இன்றெ றிந்த வெருமை யிதுதனைத் 
தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் 
நன்றி தென்றன ரந்தணர் நல்கினார 
நின்று பின்சில நீதிகள் ஓதினார்.
187 ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற் 
காது காகங் கவர்ந்தன வாமெனின் 
தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென 
ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.
188 தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி 
சாத நல்ல தகர்முகத் துப்படின 
பூத மென்றனர் புண்ணிய நூல்களின் 
நாத னாரத் துராதிக ணன்றரோ.
189 என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் 
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது 
சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின 
நன்றி தென்று நயந்தன ரந்தணர்.
190 சென்று நல்லமிர் துண்டது தின்றனர் 
அன்று மன்ன னிசோதர னன்னையோ 
டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென 
நன்று சொல்லினர் நான்மறை யாளரே.
இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்
191 அத்த லத்தக ராங்கது கேட்டபின் 
ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன 
இத்த லத்திறை யான விசோமத 
மத்த யானையின் மன்னவ னென்மகன்.
192 இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி 
இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் 
இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் 
இதுவென் யானிவ ணின்னண மாயதே.
193 யான்ப டைத்த பொருட்குவை யாமிவை 
யான்வ ளர்த்த மதக்களி றாமிவை 
யான ளித்த குலப்பரி யாமிவை 
யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.
194 இவர்க ளென்கடைக் காவல ராயவர் 
இவர்க ளென்படை நாயக ராயவர் 
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர் 
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.
195 என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் 
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி 
மன்னு தன்மறை யானொருட வைகுமோ 
என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.
196 அசைய தாகி யரும்பட ரொன்றிலா 
இசையி லாதன யானுற வித்தலைத் 
தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ் 
வசையின மன்னவன் வானுல குய்க்குமோ.
197 பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம் 
மேதி னிப்பதி யாதல் விடுத்தபின் 
யாது செய்தன னோவினை யேனிடை 
யாது செய்குவ னோவுண ரேனினி.
சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்
198 இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா 
வினையி னாகிய வெந்துயர் தந்திடத் 
தனையன் மாளிகை தன்னுள நோகமுன் 
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.
199 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் 
வந்தி டங்கரு மாகிய வாடது 
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து 
வந்து மாயிட மாகி வளர்ந்ததே.
200 வணிகர் தம்முடன் மாமயி டம்மது 
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் 
அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் 
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.
201 தூர பாரஞ் சுமந்த துயரது 
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள் 
ஆர மூழ்குவ தம்மயி டங்கரை 
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.
202 வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால் 
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம் 
அரைச வாகன மாயது போயதென் 
றுரைசெய் தாரர சற்குழை யாளரே.
ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.
203 அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன் 
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும் 
பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான் 
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். 
204 அரச னாணை யறிந்தரு ளில்லவர் 
சரண நான்கினை யுந்தளை செய்தனர் 
கரண மானவை யாவுங் களைந்தனர் 
அரண மாமற னில்லது தன்னையே.
205 கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந் 
தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர் 
நெய்பெய் சலாகை கடைந்தபின் 
கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.
206 ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி 
மேய மேதித் தசைமிக வெந்ததை 
வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள் 
மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.
207 இன்னு மாசை யெனக்குள திவ்வழித் 
துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது 
தன்னி னாய குறங்குக டித்தது 
தின்னி னாசை சிதைந்திட மென்றனள்.
இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்
208 அனங்க னான பெருந்தகை யண்ணலைச் 
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில் 
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள் 
மனங்கொ ளாவொரு மானுட நாயினை.
209 குட்ட மாகிய மேனிக் குலமிலா 
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின் 
நட்ட மாகிய நல்லெழின் மேனியள் 
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.
210 அழுகி நைந்துட னஃகு மவயவத் 
தொழுகு புண்ணி னுருவின ளாயினள் 
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் 
தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.
211 உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள் 
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை 
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை 
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.
212 நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல் 
தீய வல்வினை தேடுத லேகொலோ 
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள் 
மாய மற்றிது தன்னையும் வவ்வுமே.
பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்
213 என்று தன்புறத் திப்படிக் கூறினர் 
சென்று சேடியர் பற்றிய வத்தகர் 
ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும் 
சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.
214 தேவி யென்னை முனிந்தனை சென்றொரு 
பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ 
பாவி நின்னுரு வின்னண மாயது 
பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.
215 நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை 
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை 
வஞ்ச னைமட வாய்மயி டம்மது 
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.
216 என்று கண்ட மொறுமொறுத் தென்செயும் 
நின்று நெஞ்சம துள்சுட நின்றது 
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர் 
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.
எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்
217 மற்றம் மாநகரத்து மருங்கினில் 
சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின் 
உற்று வாரணப் புள்ளுரு வாயின 
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.
218 கண்டு மன்னவன் கண்களி கொண்டனன் 
சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக் 
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன் 
மண்டு போர்வினை வல்லவு மாயவே.
219 தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன 
மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த 
வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ 
தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.
நான்காஞ் சருக்கம்
220 செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங் 
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச 
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச 
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.
221 இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன் 
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு 
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢ 
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.
222 பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற் 
சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி 
நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார் 
பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.
223 வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன் 
தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி 
வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி 
களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்
224 அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத் 
தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த் 
தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர் 
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.
225 வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி 
அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி 
நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான் 
முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.
226 ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச் 
சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே 
பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே 
கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.
227 அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி 
நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச் 
சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி 
அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான்.
228 கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை 
இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே 
ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை 
பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.
229 மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும் 
இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன் 
உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும் 
மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.
முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.
230 பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று 
வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற 
ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற 
திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும்.
இதுவும் அது
231 சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப் 
புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும் 
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த் 
திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.
232 இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம் 
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி 
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர் 
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும். 
233 ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர் 
ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும் 
போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க் 
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.
234 அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும் 
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக் 
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும் 
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.
235 உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும் 
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி 
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல் 
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.
236 பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண் 
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும் 
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி 
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.
237 கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும் 
மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும் 
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி 
உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும்.
238 தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம் 
பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள். 
ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி 
பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ.
239 சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம் 
உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக் 
கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம் 
அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.
முனிவரர் மீண்டும் கூறல்
240 ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால் 
ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல் 
வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே 
சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.
241 இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க் 
கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய் 
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ் 
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.
242 நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக் 
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச் 
சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய் 
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.
243 இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய 
மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக் 
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன் 
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.
244 வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந் 
தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார் 
ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார் 
ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.
245 உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம் 
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால் 
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார் 
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.
246 மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச் 
செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல் 
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு 
பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.
247 கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக் 
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட் 
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட 
பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும்.
248 பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர் 
மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே 
அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம் 
பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே.
249 அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக் 
குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச் 
செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன் 
முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான்.
250 சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢ 
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச் 
சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢ 
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.
251 விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல் 
அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம் 
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ 
டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.
252 இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள் 
பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங் 
இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள் 
பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே.
253 அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை 
அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம் 
பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார் 
இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.
254 பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும் 
வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க் 
குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும் 
அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன்.
255 நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ 
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப 
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல் 
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.
256 இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச் 
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும் 
பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக் 
கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான்
257 கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற் 
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும் 
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான் 
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.
258 கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய் 
ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி 
செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான் 
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.
259 அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால் 
உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக் 
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ 
மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.
இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்
260 காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர் 
ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய 
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன் 
வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.
261 வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர் 
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண் 
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான் 
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.
262 ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப 
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின் 
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும் 
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.
263 அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர் 
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர் 
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள் 
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.
264 இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும் 
நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும் 
தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார் 
அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய்.
265 இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென் 
றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ் 
செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢ 
வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.
266 என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே 
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி 
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன் 
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.
267 இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள் 
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப் 
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட 
சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே.
இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்
268 மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே 
போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே 
ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே 
போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.
269 நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும் 
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள் 
சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம் 
ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.
270 வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல் 
தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான் 
ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக் 
கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.
271 யானுமல தெனதுமல திதமுமல தென்று 
மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய் 
ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே 
ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.
272 ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ 
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக் 
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய் 
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.
273 என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச் 
சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா 
இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து 
நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான்.
274 இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே 
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில் 
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால் 
நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.
275 முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப் 
பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந் 
துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப் 
பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.
276 மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ் 
சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட் 
சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப் 
பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.
277 ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை 
வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான் 
ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன் 
ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.
சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்
278 அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப் 
பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢ 
திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு 
அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ.
279 வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில் 
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி 
அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள் 
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.
280 இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின் 
மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே 
வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢ 
தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய்.
281 மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம் 
நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம் 
ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா 
ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே.
282 ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச் 
சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார் 
போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார் 
மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.
283 செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே 
கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ் 
செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப 
வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.
284 கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை 
பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென் 
றருகணைய நுந்துதலு மலறியது தழுவி 
பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.
285 நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார 
ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ 
சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ 
யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ.
286 முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க் 
கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே 
தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத் 
தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.
287 திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின் 
உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக் 
கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும் 
உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.
288 ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர் 
இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும 
பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும் 
ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.
289 தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள் 
அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ 
வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற் 
சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய்.
290 எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள் 
கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே 
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த 
வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.
291 மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய் 
பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி 
மன்னுசிறை வாரணம தாகிவத மருவி 
மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.
292 சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர் 
வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி 
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி 
வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.
293 இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென் 
றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா 
விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா 
மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.
294 ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந் 
தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே 
நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார் 
ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.
295 தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல் 
மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி 
சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு 
கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.
296 எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும 
வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ 
அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ. 
வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.
297 அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே 
பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ 
அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந் 
தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.
298 மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே 
ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல் 
காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ 
மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.
299 அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம் 
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர் 
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய 
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.
300 அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப் 
பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢ 
டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின் 
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்.
301 என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக் 
கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற் 
சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான் 
வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.
302 வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி 
மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை 
அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத் 
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்
303 ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை 
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும் 
நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப் 
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான்.
304 மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை 
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய 
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித் 
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.
305 தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால 
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத் 
தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக் 
காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.
306 மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய 
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர் 
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய் 
மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.
307 வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித் 
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து 
வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே 
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.
308 ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின 
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின் 
ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான் 
ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.
309 அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப் 
பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற் 
கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள் 
அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான். 
310 அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத 
தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின் 
எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார் 
அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.
311 இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின் 
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும் 
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின் 
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.
312 செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந் 
எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே 
மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ 
தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின்
313 ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந் 
தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே 
பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன் 
மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.
314 இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு 
மெரித்திர ளெனவஞ்சிப் 
பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந் 
தற்கிது பொறையென்றே 
மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல் 
விடுத்தவ ருடன்போகி 
முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற் 
றெழுதுநன் முனியானான்.
315 வெய்ய தீவினை வெருவுறு மாதவம 
விதியினின் றுதிகொண்டான் 
ஐய தாமதி சயமுற வடங்கின 
னுடம்பினை யிவணிட்டே 
மையல் வானிடை யனசனர் குழாங்களுள் 
வானவன் றானாகித் 
தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் 
தொகுதியின் மகிழ்வுற்றான்.
316 அண்ண லாகிய வபயனுந் தங்கையு 
மாயுக மிகையின்மை¢ 
நண்ணி நாயக முனிவனி னறிந்தனர 
நவின்றநற் குண மெல்லாம் 
கண்ணி னார்தம துருவின 
துடலங்கள் கழிந்தன கழி போகத் 
தெண்ணில் வானுல கத்திரண் டாவதி 
னிமையவர் தாமானார்
317 அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ் 
செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக் 
நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த 
வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.
318 வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி 
மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும் 
அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம் 
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந
319 மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத் 
தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள் 
ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம 
ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின் 
320 வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது 
தருவது சுரகதி தந்து பின்னரும் 
பொருவறு சிவகதி புணர நிற்பது 
திருவற நெறியது செவ்வி காண்மினே.
யசோதர காவியம் முற்றிற்று.

மூன்றாஞ் சருக்கம்
யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்
155 மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர் நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப் பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் புற்ற தாகு முரைக்குறு கின்றதே.
157 அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன் வம்பு வாரண முட்டையின் வைத்துடன் கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.
158 சந்தி ரம்மதி யாகிய தாயவள் வந்து மாநக ரப்புறச் சேரிவாய முந்து செய்வினை யான்முளை வாளெயிற் றந்த மிக்க சுணங்கம் தாயினாள்.
159 மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக் கியலு பாயன மென்று கொடுத்தனர் மயரி யாகு மிசோமதி மன்னவன இயலு மாளிகை யெய்தின வென்பவே.
160 மன்ன னாகிய மாமயின் மாளிகை தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத் தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண் டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .
161 அஞ்சி லோதியர் தாமடி தைவரப் பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.
162 சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் தரைய மேகலை யாரி மைர்ந்துணும அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய இரைய வாவி யிருந்தயில் கின்றதே.
163 வந்து குப்பையின் மாசன முண்டபின் சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச் சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே
164 நல்வ தத்தொ டறத்திற நண்ணலார கொல்வ தற்குள முன்செய் கொடுமையான ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.
165 மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை முற்று வார்முலை யாண்முயங் குந்திறம மற்ற மாமயில் வந்தது கண்டதே.
166 அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின தப்பி லன்னது சாரன்றன் கண்களைக் குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.
167 முத்த வாணகை யாண்முனி வுற்றனள் கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும் மத்த கத்தை மடுத்து மறித்தது தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.
168 தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள் நாய்பின் னோடி நலிந்தது கவ்விய வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது தீமை செய்வினை செய்திற மின்னதே.
169 நாயின் வாயில் நடுங்கிய மாமயில் போய தின்னுயிர் பொன்றின மன்னவன் ஆயு மாறறி யாத விசோமதி நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.
யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
170 மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை இன்னல் செய்யுமோ ரேனம தாகிய தன்ன தாகு மருவினை யின்பயன்..
171 சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் வந்து காரிருள் வண்ணத்த நாகமாய அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர் வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.
172 தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற் சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர் பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.
மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்
173 மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் உன்னு மொப்பி லுலோகித விப்பெயர் மன்னு மீனின் வடிவின தாயிற்றே.
சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்
174 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் முந்து சன்று முதலைய தாயது¢ வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.
175 அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் வந்து வாயின் மடுத்தது கொண்டது¢ கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் தந்த கொல்கென மன்னவன் சாற்றினான்
176 வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢ கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர் அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.
சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
177 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்து வார்வலைப் பட்ட கராமரித தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.
178 மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர் கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் குற்ற செய்கைக் குரித்தென வோதினார்.
179 அறுத்த மீனி னவயவ மொன்றினைக் கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன சிறக்க வென்றனர் தீவினை யாளரே.
180 நின்ற கண்டத்து நீளுயிர் போமது சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது தின்று தின்று துறக்கத் திருத்துதல் நன்று நன்றென நைந்திறந் திட்டதே
மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்
181 மன்னன் மாமயில் சூகர மாயமீன் முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.
தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.
182 தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢ ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.
183 தாய்வ யிற்கரு வுட்டக ராயது போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்.
184 வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத் தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.
யசோமதி பலியிடும் செய்தி கூறல்
185 மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன் பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய் உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான் கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.
186 இன்றெ றிந்த வெருமை யிதுதனைத் தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் நன்றி தென்றன ரந்தணர் நல்கினார நின்று பின்சில நீதிகள் ஓதினார்.
187 ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற் காது காகங் கவர்ந்தன வாமெனின் தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.
188 தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி சாத நல்ல தகர்முகத் துப்படின பூத மென்றனர் புண்ணிய நூல்களின் நாத னாரத் துராதிக ணன்றரோ.
189 என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் நன்று நாமுன் வளர்க்க விடுத்தது சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின நன்றி தென்று நயந்தன ரந்தணர்.
190 சென்று நல்லமிர் துண்டது தின்றனர் அன்று மன்ன னிசோதர னன்னையோ டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர் நான்மறை யாளரே.
இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்
191 அத்த லத்தக ராங்கது கேட்டபின் ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன இத்த லத்திறை யான விசோமத மத்த யானையின் மன்னவ னென்மகன்.
192 இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் இதுவென் யானிவ ணின்னண மாயதே.
193 யான்ப டைத்த பொருட்குவை யாமிவை யான்வ ளர்த்த மதக்களி றாமிவை யான ளித்த குலப்பரி யாமிவை யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.
194 இவர்க ளென்கடைக் காவல ராயவர் இவர்க ளென்படை நாயக ராயவர் இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர் இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.
195 என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் தன்ன மென்னடை யாளமிர் தம்மதி மன்னு தன்மறை யானொருட வைகுமோ என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.
196 அசைய தாகி யரும்பட ரொன்றிலா இசையி லாதன யானுற வித்தலைத் தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ் வசையின மன்னவன் வானுல குய்க்குமோ.
197 பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம் மேதி னிப்பதி யாதல் விடுத்தபின் யாது செய்தன னோவினை யேனிடை யாது செய்குவ னோவுண ரேனினி.
சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்
198 இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா வினையி னாகிய வெந்துயர் தந்திடத் தனையன் மாளிகை தன்னுள நோகமுன் சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.
199 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்தி டங்கரு மாகிய வாடது நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து வந்து மாயிட மாகி வளர்ந்ததே.
200 வணிகர் தம்முடன் மாமயி டம்மது பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.
201 தூர பாரஞ் சுமந்த துயரது தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள் ஆர மூழ்குவ தம்மயி டங்கரை சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.
202 வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால் அரைச வன்ன மெனும்பெய ராகும்நம் அரைச வாகன மாயது போயதென் றுரைசெய் தாரர சற்குழை யாளரே.
ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.
203 அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன் வணிகர் தம்பொருள் வாரி மயிடமும் பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான் கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். 
204 அரச னாணை யறிந்தரு ளில்லவர் சரண நான்கினை யுந்தளை செய்தனர் கரண மானவை யாவுங் களைந்தனர் அரண மாமற னில்லது தன்னையே.
205 கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந் தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர் நெய்பெய் சலாகை கடைந்தபின் கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.
206 ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி மேய மேதித் தசைமிக வெந்ததை வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள் மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.
207 இன்னு மாசை யெனக்குள திவ்வழித் துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது தன்னி னாய குறங்குக டித்தது தின்னி னாசை சிதைந்திட மென்றனள்.
இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்
208 அனங்க னான பெருந்தகை யண்ணலைச் சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில் கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள் மனங்கொ ளாவொரு மானுட நாயினை.
209 குட்ட மாகிய மேனிக் குலமிலா அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின் நட்ட மாகிய நல்லெழின் மேனியள் குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.
210 அழுகி நைந்துட னஃகு மவயவத் தொழுகு புண்ணி னுருவின ளாயினள் முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.
211 உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள் இம்மைச் செய்த வினைப்பய னேயிவை எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.
212 நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல் தீய வல்வினை தேடுத லேகொலோ மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள் மாய மற்றிது தன்னையும் வவ்வுமே.
பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்
213 என்று தன்புறத் திப்படிக் கூறினர் சென்று சேடியர் பற்றிய வத்தகர் ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும் சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.
214 தேவி யென்னை முனிந்தனை சென்றொரு பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ பாவி நின்னுரு வின்னண மாயது பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.
215 நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை வஞ்ச னைமட வாய்மயி டம்மது துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.
216 என்று கண்ட மொறுமொறுத் தென்செயும் நின்று நெஞ்சம துள்சுட நின்றது அன்று தேவி யலைப்ப வழிந்துயிர் சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.
எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்
217 மற்றம் மாநகரத்து மருங்கினில் சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின் உற்று வாரணப் புள்ளுரு வாயின வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.
218 கண்டு மன்னவன் கண்களி கொண்டனன் சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக் கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன் மண்டு போர்வினை வல்லவு மாயவே.
219 தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.

நான்காஞ் சருக்கம்
220 செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங் கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.
221 இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன் வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢ இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.
222 பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற் சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார் பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.
223 வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன் தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்
224 அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத் தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த் தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர் மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.
225 வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான் முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.
226 ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச் சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.
227 அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச் சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான்.
228 கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.
229 மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும் இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன் உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும் மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.
முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.
230 பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும்.
இதுவும் அது
231 சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப் புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும் ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த் திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.
232 இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம் வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர் ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும். 
233 ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர் ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும் போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க் காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.
234 அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும் பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக் குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும் முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.
235 உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும் அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல் இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.
236 பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண் தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும் மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.
237 கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும் மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும் விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும்.
238 தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம் பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள். ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ.
239 சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம் உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக் கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம் அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.
முனிவரர் மீண்டும் கூறல்
240 ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால் ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல் வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.
241 இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க் கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய் பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ் சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.
242 நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக் கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச் சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய் அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.
243 இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக் கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன் பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.
244 வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந் தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார் ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார் ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.
245 உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம் மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால் உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார் செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.
246 மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச் செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல் பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.
247 கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக் கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட் டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும்.
248 பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர் மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம் பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே.
249 அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக் குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச் செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன் முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான்.
250 சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢ நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச் சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢ வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.
251 விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல் அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம் முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.
252 இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள் பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங் இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள் பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே.
253 அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம் பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார் இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.
254 பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும் வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க் குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும் அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன்.
255 நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல் வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.
256 இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச் சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும் பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக் கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான்
257 கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற் கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும் பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான் மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.
258 கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய் ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான் நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.
259 அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால் உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக் கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.
இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்
260 காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர் ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன் வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.
261 வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர் அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண் சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான் மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.
262 ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின் ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும் மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.
263 அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர் கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர் அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள் கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.
264 இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும் நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும் தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார் அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய்.
265 இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென் றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ் செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢ வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.
266 என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன் கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.
267 இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள் கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப் பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே.
இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்
268 மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.
269 நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும் ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள் சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம் ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.
270 வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல் தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான் ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக் கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.
271 யானுமல தெனதுமல திதமுமல தென்று மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய் ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.
272 ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக் கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய் நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.
273 என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச் சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான்.
274 இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில் தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால் நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.
275 முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப் பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந் துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப் பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.
276 மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ் சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட் சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப் பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.
277 ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான் ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன் ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.
சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்
278 அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப் பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢ திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ.
279 வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில் துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள் நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.
280 இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின் மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢ தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய்.
281 மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம் நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம் ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே.
282 ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச் சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார் போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார் மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.
283 செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ் செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.
284 கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென் றருகணைய நுந்துதலு மலறியது தழுவி பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.
285 நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ.
286 முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க் கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத் தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.
287 திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின் உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக் கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும் உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.
288 ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர் இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும் ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.
289 தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள் அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற் சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய்.
290 எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள் கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.
291 மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய் பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி மன்னுசிறை வாரணம தாகிவத மருவி மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.
292 சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர் வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.
293 இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென் றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.
294 ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந் தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார் ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.
295 தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல் மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.
296 எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ. வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.
297 அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந் தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.
298 மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல் காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.
299 அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம் நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர் அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.
300 அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப் பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢ டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின் மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்.
301 என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக் கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற் சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான் வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.
302 வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத் தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்
303 ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும் நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப் பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான்.
304 மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித் துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.
305 தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத் தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக் காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.
306 மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர் ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய் மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.
307 வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித் தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.
308 ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின் ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான் ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.
309 அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப் பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற் கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள் அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான். 
310 அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின் எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார் அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.
311 இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின் இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும் இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின் இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.
312 செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந் எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின்
313 ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந் தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன் மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.
314 இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு மெரித்திர ளெனவஞ்சிப் பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந் தற்கிது பொறையென்றே மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல் விடுத்தவ ருடன்போகி முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற் றெழுதுநன் முனியானான்.
315 வெய்ய தீவினை வெருவுறு மாதவம விதியினின் றுதிகொண்டான் ஐய தாமதி சயமுற வடங்கின னுடம்பினை யிவணிட்டே மையல் வானிடை யனசனர் குழாங்களுள் வானவன் றானாகித் தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியின் மகிழ்வுற்றான்.
316 அண்ண லாகிய வபயனுந் தங்கையு மாயுக மிகையின்மை¢ நண்ணி நாயக முனிவனி னறிந்தனர நவின்றநற் குண மெல்லாம் கண்ணி னார்தம துருவின துடலங்கள் கழிந்தன கழி போகத் தெண்ணில் வானுல கத்திரண் டாவதி னிமையவர் தாமானார்
317 அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ் செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக் நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.
318 வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும் அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம் வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந
319 மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத் தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள் ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின் 
320 வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது தருவது சுரகதி தந்து பின்னரும் பொருவறு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே.

யசோதர காவியம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.