LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

யாதுமாகிய அவள்.. வித்யாசாகர்!

1

சிக்னலில் நிற்கும்
அவசரத்திலும்
மனசு தனித்து நிற்கிறது
அவளிடம்..
----------------------------------------------------------------

2
பூ
வா
தலையா
போட்டுப்பார்கிறேன்
இரண்டிலுமே
அவள் முகம்தான் தெரிகிறது..
----------------------------------------------------------------

3
ல்லிகைப்பூ தான்
விற்கிறார்கள் தெருவில்
ஆனால் ஏனோ எனக்கு
அவள் வாசமே வருகிறது..
----------------------------------------------------------------

4
மை
யிட்டால் அழகாமே
இட்டாலும்
இடாவிட்டாலும் எனக்கு
அவள்மட்டுமே
அழகு..
----------------------------------------------------------------

5
கு
ச்சி ஆட்டம்
ஆடும் குழந்தைகளைப் போலவே
மனதிற்குள்
அவள்தான் ஆடுகிறாள்..
----------------------------------------------------------------

6
ணி பொழிகிறது
மழை சோவெனப் பெய்கிறது
நானென்னமோ
அவள் நினைவில் மட்டுமே
நனைகிறேன்..
----------------------------------------------------------------

7
கா
ற்றும் காற்றும்
மோதாமல்
கலந்துக்கொள்வதைப் போலவே
கலந்துவிடுகிறது
மனசு அவளிடம்..
----------------------------------------------------------------

8
ட்லி சாப்பிட்டாலும்
உப்புமா சாப்பிட்டாலும்
மனசு
அவளைத்தான்
அசை போடுகிறது..
----------------------------------------------------------------

9
பாட்டு கேட்கையில்
ஊரை நினைத்துக் கொள்வதைப்
போலத்தான்
அவளையும் நினைத்துக்கொள்கிறேன்
கொஞ்சநேரத்தில் ஊர் மறந்துவிடுகிறது
அவளை மறக்கவே முடிவதில்லை..
----------------------------------------------------------------

10
வா
ட்சப் திறக்கிறேன்
உள்ளே அவள்
வைபரைப் பார்க்கிறேன்
உள்ளே அவள்
பேஸ்புக் திறக்கிறேன்
அங்கும் அவளே இருக்கிறாள்

கைப்பேசியையே நிறுத்திவிடுகிறேன்
கண்ணுக்குள்  வந்துநிற்கிறாள்
கண்களை மூடிக்கொள்கிறேன்
கனவுக்குள் வருகிறாள்
என்னசெய்வது அவளை ?
வேறென்னச்செய்வது
வெறுமனே நினைத்துக்கொள்கிறேன்
உள்ளே அப்படி இனிக்கிறாள்.. அவள்!!
--------------------------------------------------------------------
-வித்யாசாகர்

 

by Swathi   on 17 Jun 2015  0 Comments
Tags: Yathumagiya Aval   Vidhyasagar   யாதுமாகிய அவள்   வித்யாசாகர்           
 தொடர்புடையவை-Related Articles
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
பேச்சாட்டன்.. - வித்யாசாகர் பேச்சாட்டன்.. - வித்யாசாகர்
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..  - வித்யாசாகர் நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.