LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

என் அவளுக்கு மட்டும்... - தண்மதி

இது என்ன விபரீதம்
உணவுக்குழல் வழி இறங்கி
இதயத்தில் தங்குகிறாய்!

அசைவக்காரி
என்உயிரைத் தின்று தின்று
உடம்பு வளர்க்கிறாய்
உயிர்முழுதும் தீர்ந்த பின்னால் என்உடம்பைத்  தின்று
உயிர் வளர்ப்பாயோ!
 
இந்த உலகினர் காதலில்
எனக்குச் சம்மதமில்லை
ஹார்மோன்களில் சுரந்து
கட்டிலில் வழிந்து விடுகிறது
இவர்களது காதல்
என் காதல்
அழகைத் துளைத்து
உடம்பைக் கிழித்து
அவள் உயிரில் பிறந்து வருகிறது
யாருக்கும் செலவிடாது
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என் முத்தங்களை
எனக்கானவளுக்காக  
கவிதை என் உணவு
நீ சமைக்கக் கற்றுக்கொள்
 
துண்டிக்க மாட்டாயென்று
நன்கு தெரிந்து கொண்டுதான்
சொல்கிறேன்
துண்டித்து விடென்று  தொலைபேசியில் பேசும்பொழுதெல்லாம்
 
உயிர்த்தோழி             
சோகங்களுக்கு எழுதலாம்
கவிதை
மரணத்திற்கு எப்படி?

ஒருநாள் கூட
நீ சொன்னதில்லை            
நேற்றைய முன்தினம்வரை
விடை பெறும்போது
'போகிறேன்'  என்று
ஒன்று ஞாபகமிருக்கிறதா  "நாளை திருமணம் என்றால்கூட
இன்று உன்னுடன் வந்துவிடுவேன்
கவலைப்படாதே" என்றாய்

உன் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
எனக்கான காதல்
அதனால்தான் என்னால்
அழ முடியவில்லை

 

- தண்மதி, பெருந்துறை 

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: தண்மதி   Thanmathi   காதல் கவிதைகள்   Yen Aval   Kadhal Kavithaigal        
 தொடர்புடையவை-Related Articles
ஒரு கேள்வி - தண்மதி ஒரு கேள்வி - தண்மதி
வராத கடிதங்கள் - தண்மதி வராத கடிதங்கள் - தண்மதி
நங்கையிற் சிறந்தவள் -தண்மதி நங்கையிற் சிறந்தவள் -தண்மதி
மழை - தண்மதி மழை - தண்மதி
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர் உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.