|
||||||||
என் பயணம் எப்பொழுது முடியும்? |
||||||||
பயணத்தில் இருந்த அம்மா என்னை ஏற்றி விட்ட ஞாபகம்,என்னைப்போல் புதியவர்களும் ஏறினர். கூட்டத்தோடு கூட்டமாய், அம்மாவும் அப்பாவும் வழியில் இறங்கிக்கொள்கினறனர்.அல்லது இறக்கி விடப்படுகின்றனர். என்னுடன் ஏறியவர்களும், ஒருவர் பின் ஒருவராய் இறங்கிக்கொள்கின்றனர். அல்லது இறக்கிவிடப்படுகின்றனர். இடையில் வந்து என்னுடன் சேர்ந்தவர்களும் இறங்கிக்கொள்கின்றனர். அடுத்து வந்து ஏறியவர்களும் இறங்கிக்கொள்கின்றனர், அல்லது இறக்கிவிடப்படுகின்றனர்.. புதிது புதிதாய் புதியவர்கள், ஏற்றி வைக்கப்படுகிறார்கள். புதியவர்களுடன் நான் மட்டும், தனிமையாய் இன்னும், பயணித்து கொண்டிருக்கிறேன். கூட்டத்தோடு பயணித்தாலும், தனிமையில் தவிக்கிறேன்.எப்பொழுது இறங்குவேன்? அல்லது இறக்கிவிடப்படுவேன்? |
||||||||
When I stopped my travel? | ||||||||
by Dhamotharan.S on 25 Jul 2016 0 Comments | ||||||||
Tags: Payanam Kavithai Tamil Payana Kavithai பயணம் கவிதை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|