|
||||||||
என் எதிர்காலத்தை அறிவது எப்படி? |
||||||||
உங்கள் வாழ்வின் கடைசி தினத்தன்று, நீங்கள் இறந்து விடுவீர்கள். இது தான் உங்கள் வாழ்க்கையின் கடைசிக் காட்சி. இதில் எந்த ஒளிவும் இல்லை. எந்த மர்முமும் இல்லை. கதையின் முடிவே தெரிந்த பிறகு, அடுத்த அத்தியாயத்தில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை பற்றி அறிய ஆசை கொண்டீர்களே, இன்று என்பதைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு விட்டீர்களா? அதுவே இன்னும் பாக்கி இருக்கிறதே? அடுத்த கணத்தை விடுங்கள். இந்தக் கணம் பற்றியே நீங்கள் அறியாதது பல இருக்கும் போது, அடுத்தடுத்த நாட்களைப் பற்றி அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்தப் பிரபஞ்சத்திற்கு எப்படியும் வந்து விட்டீர்கள். வாழ்க்கையை நொடிக்கு நொடி அனுபவித்து உணருங்கள். நாளைக்கு என்ன நடந்தாலும், நரகத்திலேயே தள்ளப்பட்டாலும், என் நல்வாழ்வுக்கு நானே பொறுப்பு என்று உணர்ந்து, அதை எவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ள முடியுமோ, அவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ளுங்கள்.
கடினமான விஷயங்களை ஏன் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்? அவை கடினம் என்பதல்ல உங்கள் பிரச்சினை. அவற்றை எதிர்கொள்கையில் நீங்கள் அனுபவிக்க நேரிடும் வேதனைகள் தானே உங்கள் பிரச்சினை? வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களை நீங்கள் பாதிப்பில்லாமல் கடந்து வர முடிந்தால், எவ்வளவு பெருமிதம் கொள்வீர்கள்? உங்களுக்கு உள்ளே அப்படி ஒரு தன்மை இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்வின் கடைசி தினத்தன்று, நீங்கள் இறந்து விடுவீர்கள். இது தான் உங்கள் வாழ்க்கையின் கடைசிக் காட்சி. இதில் எந்த ஒளிவும் இல்லை. எந்த மர்முமும் இல்லை. கதையின் முடிவே தெரிந்த பிறகு, அடுத்த அத்தியாயத்தில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை பற்றி அறிய ஆசை கொண்டீர்களே, இன்று என்பதைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு விட்டீர்களா? அதுவே இன்னும் பாக்கி இருக்கிறதே? அடுத்த கணத்தை விடுங்கள். இந்தக் கணம் பற்றியே நீங்கள் அறியாதது பல இருக்கும் போது, அடுத்தடுத்த நாட்களைப் பற்றி அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தப் பிரபஞ்சத்திற்கு எப்படியும் வந்து விட்டீர்கள். வாழ்க்கையை நொடிக்கு நொடி அனுபவித்து உணருங்கள். நாளைக்கு என்ன நடந்தாலும், நரகத்திலேயே தள்ளப்பட்டாலும், என் நல்வாழ்வுக்கு நானே பொறுப்பு என்று உணர்ந்து, அதை எவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ள முடியுமோ, அவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ளுங்கள். கடினமான விஷயங்களை ஏன் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்? அவை கடினம் என்பதல்ல உங்கள் பிரச்சினை. அவற்றை எதிர்கொள்கையில் நீங்கள் அனுபவிக்க நேரிடும் வேதனைகள் தானே உங்கள் பிரச்சினை? வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களை நீங்கள் பாதிப்பில்லாமல் கடந்து வர முடிந்தால், எவ்வளவு பெருமிதம் கொள்வீர்கள்? உங்களுக்கு உள்ளே அப்படி ஒரு தன்மை இருக்க வேண்டும். |
||||||||
by Swathi on 24 Mar 2014 3 Comments | ||||||||
Tags: ethirkalam arivathu arivathu ethirkalam eppadi ethirkalam arivathu eppadi arivathu ethirkalam எதிர்காலம் அறிவது எப்படி எப்படி எதிர்காலம் அறிவது எப்படி அறிவது எதிர்காலம் | ||||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|