LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

எங்கள் தமிழகம்

தமிழகம் தமிழகம்

இதுதான் எங்கள் தமிழகம்!

தரணி ஆளும் தமிழகம்

பல தர்மங்கள் செய்யும் தமிழகம்!

அகமும் புறமும் எடுத்து உறைத்து

அறிவால் வெல்லும் தமிழகம்!

உலகம் யாவும் உயர்ந்து நின்று

உயர் நெறியைச் சொல்லும் தமிழகம்!

பழமை என்றும் மாறாமல்

புதுமை ஏற்கும் தமிழகம்!

பண்பில் சொட்டும் குறையாது

பாசம் காட்டும் தமிழகம்!

இரவும் பகலும் வாழ்த்திச் செல்லும்

இன்பம் நிறைந்த தமிழகம்!

இளைய இரத்தம் சுத்தம் என்று

நித்தம் சொல்லும் தமிழகம்!

வானில் மின்னல் வேரோட

பருவ மழையில் நனையும் தமிழகம்!

தேனெடுத்து திடப்படுத்தி

செதுக்கிய தேகம் கொண்ட தமிழகம்!

கலாச்சாரம் பண்பாடு சீர்கெடா

பல கலைகள் காக்கும் தமிழகம்!

காய்ந்த வயிறோடு உயிர்கண்டால்

கண் கனிந்து உ(ணவ)(யிர)ளிக்கும் தமிழகம்!

தமிழுக்கு வஞ்சகம் செய்தோருக்கும்

வாழ்வைத் தருவதே தமிழகம்!

துன்பம் துதிக்கும் துரோகிகளுக்கும்

இன்பமே போதிக்கும் தமிழகம்!

தமிழகம் தமிழகம்

இது தான் எங்கள் தமிழகம்!

உலகிற்கே ஒளியை ஏற்றி

உயிர் கொடுக்கும் எங்கள் தமிழகம்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: எங்கள் தமிழகம்   Yengal Thamizhagam   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Tamilnadu Kavithai   Kavithai about Tamilnadu  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.