LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

எங்கள் வீட்டு அணில்

சுற்றி வர மரங்களுண்டு எங்கள் வீட்டிலே,

பறவைகளும்,அணில்களும் நிறைய உண்டு அதன் மீதிலே !

அழகு அணில் குறு குறுவென  குதித்து  வந்தது,

மரத்தை விட்டு சமையலறையை எட்டி பார்த்தது,

அம்மா மட்டும் அப்பொழுது சமைத்துக்கொண்டிருந்தாள்.

அறுத்து வைத்த தேங்காய் ஒன்று அங்கிருந்தது,

முட்டை கண்ணால் மேலும்,கீழும் சுற்றி பார்த்தது,

ஒட்டி வந்த கயிற்றின் மேலே காலை வைத்தது.

அங்கிருந்து சத்தமில்லாமல் உள்ளே குதித்தது

வைத்திருந்த தேங்காயை  கையில் எடுத்தது.

அரவம் கேட்டு அம்மா திரும்பி பார்த்தாளே.

தேங்காயை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தது,

திரும்பி பார்த்த அம்மாவுக்கு பாவமாய் இருந்தது

விட்டு விட்ட தேங்காயை எடுத்து வெளியே வைத்தாளே !

ஓடிய அணில் மரத்தில் ஏறி திரும்பி பார்த்தது,

வெளியில் வைத்த தேங்காய் கண்ணில் பட்டது.

பயந்து பயந்து மீண்டும் மெல்ல வந்தது.

வைத்திருந்த தேங்காயை கையில் எடுத்தது.

சுற்றும் முற்றும் பயந்து பயந்து திரும்பி பார்த்தது.

எதுவும் தெரியாதது போல் அம்மா நின்றாளே !.

அப்படியே தூக்கிக்கொண்டு, ஓடி மறைந்தது !

My home Scurrel
by Dhamotharan.S   on 13 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.